சனி, 20 மே, 2017

கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பைத் துண்டித்த இளம் பெண்

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. இவரை இன்று காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90% அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேறி வருகிறார். இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது பிறப்புறுப்பை அறுத்ததாக 23 வயது பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அவர் அளித்த தகவலின்படி அப்பெண்ணின் தாயாருக்கும் கணேஷனந்தாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாகவே உறவு இருந்துள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் மகளையும் பாலியல் உறவில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண்ணின் தாயும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாயின் அனுமதியுடன் தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாலேயே அவரது பிறப்புறுப்பைத் துண்டித்திருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது"
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது வயது 23. ஆனால், அவர் 12-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே தன்னை அந்த சாமியார் வல்லுறவில் ஈடுபடுத்தியதால் புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: