வியாழன், 18 மே, 2017

தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 12 எம் எல் ஏக்கள் ... கூவத்தூர் வாக்குறுதிகள் நிறைவேறவில்லையாம்

கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் 12 பேர் சென்னையில் தோப்பு #வெங்கடாசலம் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. #எடப்பாடி க்கு எதிராக எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டத்தால் பழனிசாமி அரசுக்கு #சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பிஜேபி கட்சி உள்ளதாக தகவல் வருகிறது .. # அதிமுக பெயரில் இப்போது தான் தாம் நினைத்தது நடக்கிறது என்றும் இப்பொது எல்லாம் மத்திய மந்திரியே நேரடியாக வந்து தலைமை செயலகத்தில் உத்தரவு போட முடிகிற நிலையில் கட்சி உடைந்தால் இதன் பயன் திமுக வுக்கு சென்று விடாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #பிஜேபி கட்சியினர் படபடப்போடு ஆலோசனை செய்து வருகிறார்களாம்
Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை: