வியாழன், 18 மே, 2017

மகன் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் தற்கொலை .. தேனியில் சோகம்!

தேனியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி ஜெயபாரதி(55). இவர் ஆசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது மகன் மனோஜ்(28) இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அங்கு தனது உறவினரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதற்கு ஜெயபாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மனோஜோ தாயின் எதிர்ப்பை மீறி கடந்த 12ம் தேதி தான் காதலித்த பெண்ணை சென்னையில் வைத்து திருமணம் செய்து கெண்டார். திருமணம் முடிந்த பிறகு தனது தாயை சமாதானம் செய்வதற்காக நேற்று தேனிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்திருக்கிறது. மனோஜ் எவ்வளவு தட்டியும் கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் பயந்து போன மனோஜ் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜெயபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகன் காதல் திருமணம் செய்த நாளில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லைவ்டே

கருத்துகள் இல்லை: