செவ்வாய், 16 மே, 2017

தொழிலாளர்களை மிரட்டும் நீதிமன்றம் .. பணத்தை கொள்ளையடித்த அரசை .. மௌனம்!

stanley.rajan. போக்குவரத்து தொழிலாளர்கள்
உடனடியாக
பணிக்கு திரும்பாவிட்டால் ’எஸ்மா’
சட்டம் பாயும் : ஐகோர்ட்
பொதுமக்களின் நலன் மீது ஐகோர்ட் வைத்திருக்கும் அக்கறை பாராட்டதக்கது, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டம் பாயும் என மிரட்டியிருக்கின்றது
ஆனால் இதே மிரட்டலை முன்பு கூவத்தூரில் கூடியிருந்த 122 மக்கள் பிரதிநிதிகள் மீதும் காட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவர்கள் மக்கள் பணியாளர்கள் இல்லையா? அவர்கள் மீது சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா?
அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
இதோ பொதுமக்கள் பாதிக்கபடுகின்றார்கள் என பொங்கும் நீதிமன்றங்கள்தான், மதுகொடுமையினை கண்டு கொள்ள மறுக்கின்றன, அணுவுலைகள் என்றால் அரசின் திட்டத்தில் தலையிடமாட்டோம் என ஒதுங்குகின்றன‌
ஆனால் பஸ் ஸ்டிரைக் என்றால் மிரட்டுகின்றன‌

சரி ஊழியர்கள் பணிக்கு திரும்பட்டும், அவர்களுக்குள்ள‌ நிதி உட்பட எல்லா உரிமைகளின் கதி என்ன? அதனை பற்றி நீதிமன்றம் சொல்வதென்ன?
ஊழியர்களுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அரசுக்கும் தொழிலாளர்கள் பணத்தினை கொடுங்கள் என சொல்லியிருக்கலாம், கொடுக்க முடியாவிட்டால் நடையினை கட்டுங்கள் எனவும் சொல்லியிருக்கலாம்
சொன்னால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் சொல்லமாட்டார்கள்
சட்டம் ஒரு இருட்டறை என அண்ணா அன்றே சொல்லியிருந்தார்...அதில் அரசு மட்டும் சிகரெட் லைட்டரையோ, தீப்பெட்டியினையோ கொழுத்தி சிரித்துகொள்கின்றது

கருத்துகள் இல்லை: