வியாழன், 13 மார்ச், 2014

குஷ்பு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ! ஜாக்கிரதை ஸ்டாலினிடம் பெர்மிஷன் வாங்கியாச்சா ?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்கிறார். இதுதொடர்பாக, நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எப்போது பிரசாரத்தை தொடங்குகிறீர்கள்?
பதில்:- அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி, பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன்.
கேள்வி:- எத்தனை நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறீர்கள்?
பதில்:- ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி, 22-ந்தேதி வரை பிரசாரம் செய்வேன்.
கேள்வி:- திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வீர்களா, பொதுக்கூட்டங்களில் பேசுவீர்களா?
பதில்:- திறந்த வேனில் நின்றபடியும் பேசுவேன். பொதுக்கூட்டங்களிலும் பேசுவேன்.
கேள்வி:- 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வீர்களா?
பதில்:- அதுபற்றி இன்னும் திட்டமிடவில்லை.
கேள்வி:- எந்த பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்வீர்கள்?
பதில்:- கடந்த மூன்று வருடங்களில், அ.தி.மு.க. ஆட்சியில் எதையும் சாதிக்கவில்லை. அதையே முன்வைத்து பிரசாரம் செய்வேன்.
கேள்வி:- தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு குஷ்பு கூறினார். maalaimalar.com/

கருத்துகள் இல்லை: