புதன், 12 மார்ச், 2014

நியூயார்க்கில் பயங்கர வெடிவிபத்து: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தது

அமெரிக்காவின் நியூயார்க் அருகில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. கிழக்கு ஹெர்லம் பகுதியின் 114-வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர். வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதால் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 150 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடும் புகை எழுந்ததால் மீட்புக்குழுவினர் முக கவசம் அணிந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததையடுத்து, அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.maalaimalar

கருத்துகள் இல்லை: