புதன், 14 ஆகஸ்ட், 2013

மாயாவதி : வதேராவின் ஊழலுக்கு சோனியா எப்படி பொறுப்பாகும் ? மாயம்மா திடீர் சோனியா பாசம் புரியல்லையே ?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர், அரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கி, பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாட்டி உள்ளார்.
பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை இந்த விவகாரத்தை எழுப்பி பா.ஜனதா அமளியில் ஈடுபட்டது. செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த பிரச்சினைக்கு சோனியா காந்தி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கோரி பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் பாராளுமன்றத்திலும், மேல் சபையிலும் தெரிவித்தன.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், இந்த பிரச்சினைக்கு சோனியா காந்தி பொறுப்பு ஏற்க முடியாது. ஒருவர் தவறு செய்தால் அவரது உறவினரை தண்டிக்க முடியாது. ராபர்ட் வதேரா மீது கூறப்படும் புகாருக்கு சோனியாகாந்தி எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், ஒரு மாநில பிரச்சினையை பாரதீய ஜனதா கட்சி அரசியல் ஆக்குகிறது. சோனியா காந்தி மீதும் பழி சுமத்துகிறது. இதை ஏற்க முடியாது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: