வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தலைவாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரால் தலைவிக்கு கோபம் கூடிவிடுமோ ? மேலும் பயப்படும் ஹீரோ

திரையில் பேசும் வீர வசனங்களை எல்லாம் உண்மை என்றும் நம்பும் ரசிகனின் நெற்றியில் பெரிய முட்டாள்  என்ற நோட்டிசை ஜெயலலிதா ஓட்டியுள்ளார் தலைவா படப்பிரச்சனையில் தளபதி பயந்ததே, ஆதரவு என்ற பெயரில் யாரும் குட்டையை குழப்பிவிடக் கூடாதே என்பதற்குதான்.நல்லவேளையாக திரையுலகிலிருந்து எந்த குழப்படியும் வரவில்லை. மாறாக அரசியலில் இருந்து வந்தது பெரியதொரு ஆப்பு. ஆதரவு என்ற பெயரில் தளபதிக்கும் தலைவிக்கும் இடையிலான உறவு விரிசலை அரைப்பக்க அறிக்கையில் இன்னும் அதிகப்படுத்திவிட்டார் அரசியல் சாணக்கியர்.அய்யோ இவரிடம் யாருப்பா ஆதரவு கேட்டது?தலையில் அடித்துக் கொள்கிறார்கள் தளபதி தரப்பில்.

கருத்துகள் இல்லை: