சனி, 17 ஆகஸ்ட், 2013

உண்ணாவிரத அனுமதி மறுப்புக்கு கலைஞர் பதில் :ஒரு படைப்பாளி என்ற முறையில் பதைக்கிறேன் !

சென்னை: தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கேட்டு பதைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் தேதி 17 ஆகியும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தை வெளியிட உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியது தலைவா படக்குழு. ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் தலைவா படக்குழுவினருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஒரு படைப்பாளி என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதைக்கிறேன் என்று பதில் கூறினார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: