வெள்ளி, 28 செப்டம்பர், 2012

5 கோடி பணத்துடன் ICICI வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

 Bank Van Carrying Rs 5 Cr Hijacked In Delhi டெல்லி: டெல்லியில் ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேன் கடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மாருதி எக்கோ வேன் வந்து கொண்டிருந்தது. அதை தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி அருகே ஒரு ஹூண்டாய் வெர்னா கார் வழிமறித்தது.
பின்னர் அதிலிருந்த 5 பேர் கும்பல், வேனில் இருந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேன் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அதைக் கடத்திச் சென்றுவிட்டனர்.
டிபன்ஸ் காலனியின் டி பிளாக் வழியாக அந்த வேனும் காரும் சென்றுவிட்டன.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: