ஞாயிறு, 9 அக்டோபர், 2011

காமெடி வேண்டாம் - சீரியஸ் வடிவேலு


  சுந்தர்.சி இயக்கும் புதிய படமான ‘மசாலா’ படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யபட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதனை சுந்தர்.சி மறுத்தார். என் படத்தில் வடிவேலு நடிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. வெறும் வதந்தி என்றார்.

வடிவேலு சுந்தர்.சி படத்தில் நடிக்காதது உண்மைதான் என்றாலும் இதற்கான பேச்சு வார்த்தை நடந்து உண்மை என்று சொல்கிறது திரைவட்டாரம். மீண்டும்  காமெடி வேண்டாம். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாதிரி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த பின் காமெடியில் நடிக்கலாம் என்று சுந்தர்.சி படத்தின் வாய்ப்பை தவிர்த்து விட்டாராம் வடிவேலு.
காமெடியை கொஞ்சம் தள்ளி வைத்து சீரியஸ் யோசனையில் இருக்கும் வடிவெலு ஹீரோவாக நடிக்க கதை விவாதத்தில் இருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை: