வியாழன், 13 அக்டோபர், 2011

பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்


Mageshkumar and Shameela
கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பெண்ணைக் கொன்றதாக கருதப்பட்ட மகேஷ் குமார் அவரது கணவர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.

தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகேஷ் குமார் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் ஸாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்த பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பை தவறாக பயன்படுத்த தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதை புரிந்து கொண்டு தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்த காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்கு பயணித்தது (அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்த காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் மகிழ்ச்சியை கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனை போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாமுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், `சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்கு தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன். அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளை பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையை சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரை தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னை பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா என்னிடம் நீ போ, என்னுடன் வராதே என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டிவியில் காமெடி நிகழ்ச்சி நடத்துபவன்

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. (ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலை செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள்). அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளை பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். (இந்த எண்களை குறிப்பிட்டு கடிதத்தை முடித்து உள்ளார்).

என்று அதில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை 11ம் தேதி அவர் எழுதியுள்ளார். ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு அவர்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஈரோடு போலீஸார் தீவிர விசாரணயை முடுக்கி விட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: