ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கிழக்கில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் மீட்பு: யாருடையது என்ற மர்மம் நீடிப்பு?

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு, மற்றும் வெலிக்கந்த காட்டுப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் மறைத்து வைத்திருந்த பெருந்தொகையான ஆயுதங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவலையடுத்து மகாஓயா பொலிஸ் விசேட குழு ஒன்று அப்பகுதிகளுக்கு சென்று ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று செங்கலடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு காட்டுப்பகுதிக்குள் ஆயுதங்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஆயுதங்கள் மீட்க்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: