திங்கள், 12 செப்டம்பர், 2011

செல்வச் சந்நிதியானை தரிசிக்க சென்றவர் கடலில் மூழ்கி பலியானார்!

செல்வச் சந்நிதியானை தரிசிக்க சென்றவர் கடலில் மூழ்கி பலியானார்!
யாழ். தொண்டமனாறு செல்வச் சந்நிதியானின் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர் உறவினர்களுடன் சந்நிதியான் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொள்ளச் சென்றவர் எனவும் அவர் தொண்டமனாறு கடலில் நீராட சென்ற வேளை மக்கள் பாவனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கடல் எல்லையினைத் தாண்டிச் சென்று நீராடிய போது சுழியில் அகப்பட்டு மரணமடைந்ததாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இராசமனோகரன் மகிதன் என்பவர் என்றும் இவரது சடலம் நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் கடற்படையினாரால் மீட்கப்பட்டு தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: