புதன், 29 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளத

சென்னை: அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை மசூதிகள் உள்பட நகரின் பல கோவில்கள், மசூதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போல சென்ட்ரல், எழும்பூர் உள்பட அனைத்து ரயில் நிலையங்களுக்கும், கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், பஸ் டெப்போக்கள், திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பபட்டுள்ளது.

இது குறி்த்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சென்னை நகரில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போலீஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

தீர்ப்பு தொடர்பாக கண்டன போஸ்டர்கள் அச்சடிக்கவும், போஸ்டர் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பாக அறிவுறுத்திவுள்ளோம் என்றார்.
மக்களில் ஒருவன்... - Trivandrum,இந்தியா
2010-09-29 12:29:37 IST
அனைவர்க்கும் வணக்கம்..இங்கே செய்யப்பட கருத்து பரிமாற்றத்தை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...பெரு வாரியானவர்களின் கருத்து அமைதி காக்கவே சொல்கிறது...சொல்லப்போனால் நம் நாட்டின் மொத்த பரப்பளவில் .0000001 % கூட இல்லாத அந்த பிரச்சனைக்குரிய இடத்தை பற்றிய.தீர்ப்பு எப்பக்கம் வந்தாலும் மனிதம் காப்போம்..நீதியை மதிப்போம்..வாழ்க பாரதம்.....
ஞான prakasam - Coimbatore,இந்தியா
2010-09-29 12:24:59 IST
வி டோன்ட் பர்கேட் வி ஆர் இந்தியன்ஸ்...
dharanya - thanjavur,இந்தியா
2010-09-29 12:15:46 IST
my dear brothers and sisters first of all we are all human beings ,lovable childrens of god, under the arms of god there is no title for us as hindu , muslim, christian . so be peaceful and lovable...
செல்வி - ஜ்ஜ்ஜ்ஜஜ்,இந்தியா
2010-09-29 12:15:19 IST
நண்பர்களே நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் சண்டை மற்றும் எதுவும் வேண்டாம். தயவு செய்து அமைதி காக்கவும்....
Indian - chennai,இந்தியா
2010-09-29 12:10:39 IST
ஹாய் இந்தியன்ஸ், எதுக்கு இந்த தீர்ப்பு. எல்லாம் வேஸ்ட்....
கண்ணன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-29 11:56:11 IST
அனைவரும் இந்தியரே! என்ற எண்ணம் இருந்தால் . . . எந்த தீர்ப்பும் நல்ல தீர்ப்பே . . ....
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
2010-09-29 11:47:19 IST
தீர்ப்பு எதுவேனும் அனைவரும் அமைதி காக்க வேண்டும்....
அலிவலம்.சரவணன் - விக்டோரியாசீசல்ஸ்,இந்தியா
2010-09-29 11:33:14 IST
தீர்ப்பு எதுவானாலும் நாம உழைச்சாத்தான் சாப்பிட முடியும். அதனால எல்லோரும் அமைதியாக இருக்கணும் சாமியோ...
பாபு - சோழபாண்டியபுரம்,இந்தியா
2010-09-29 11:27:31 IST
kadavule ellorukkum amaithiyai kodu...
டேனியல் - maldives,இந்தியா
2010-09-29 11:23:35 IST
இந்த தீர்ப்பு நிச்சயம் இந்திய நீதி துறைக்கு ஒரு சவால். இந்தியாவில் மிக அதிக மக்கள் விரும்புவது அந்த இடம் பொது இடமாக மாற வேண்டும் என்பதே. மக்களுக்காக தான் கோர்ட் , அரசு , சட்டம் , இது ஒரு நாடு தழுவிய வழக்கு. எனவே இரு தரப்பையும் சாரத பொது மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும். அதுதான் சரி. இல்லை அதுதான் தீர்ப்பு ,,,,...
Lokesh - Coimbatore,இந்தியா
2010-09-29 11:23:12 IST
fate leaves no one..........
த.V - UAE,இந்தியா
2010-09-29 11:22:37 IST
இந்துக்களும் முகமதியர்களும் சகோதரத்துவத்துடன் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ்ந்துவரும் இந்த சூழ்நிலையில் இருவரும் ஏற்றுக் கொள்ளகூடிய ஒரு பொது முடிவாக இருக்க வேண்டும் .இரு மதத்திர்க்கும் பொது இடமாக அது இருக்க வேண்டும் என்பது என் கருத்து......
hussain - திருச்சிUAE,இந்தியா
2010-09-29 11:14:49 IST
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க........
பெரோஸ் கான் - ராமநாதபுரம்District,சவுதி அரேபியா
2010-09-29 10:57:27 IST
ஒரே காமெடி யா இருக்கு. ஒரு தீர்ப்புக்கு 50 வருசமா ? தீர்ப்புகள் வழங்குவதில் உலகத்தில் இந்திய கோர்ட் க்கு தான் முதல் இடம். உடனே கின்னஸ் புத்தகத்தில் போடுங்க போடுங்க போடுங்க...
ஹசன் - ஜுபைல்,சவுதி அரேபியா
2010-09-29 10:52:15 IST
தாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது....
L.N.T.Selvan - UnitedArabEmirates,இந்தியா
2010-09-29 10:52:11 IST
I agree with Mr.sankar's comment.. God always like that peoples have to be happy & calm so we should not make any violence saying the name of god. So please do not make any violence, every body our relation if there will be any violence our relatives will be in trouble pls keep in ur minds. Am not a hindu or muslim or christin...AM A INDIAN......
sudarsan - சிங்கராChennai,இந்தியா
2010-09-29 10:50:54 IST
ராமன் ஆண்டாலும் அல்லா ஆண்டாலும் வேலை ‌செய்தால் தான் சோறு. இந்த தீர்ப்பால் யாருக்கும் நன்மை கிடையாது,அரசுக்கு நல்ல செலவு....
கார்த்திகேயன் - Chennai,இந்தியா
2010-09-29 10:46:38 IST
To built a school,hospital and university in that place...
இம்ரான் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-29 10:39:35 IST
யாருடையது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சனை பண்ண வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் சிலரின் எண்ணத்தினால் தான் இப்பிரச்சனைக்கு இன்னும் முடிவுக்கு வர வில்லை. இனிமேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர வாய்பே இல்லை. எனவே இந்து முஸ்லிம் ஒற்றுமை கருதி தீர்ப்பை வெளி இட்டால் நல்லது...
ச.செ. கண்ணன் - Chidambaram,இந்தியா
2010-09-29 10:37:22 IST
சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் அரசு பள்ளி கூடங்கள் அல்லது அரசு இலவச மருத்துவமனை அமைக்கலாம். அந்த சொத்தை அரசாங்கமே எடுத்து கொண்டு எவருக்கும் சொந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்தால் சந்தோசம்......
ஹசன் பசரி - கூத்தாநல்லூர்,இந்தியா
2010-09-29 10:35:00 IST
இங்கு சில நண்பர்கள் பொது மருத்துவமனை, கல்லூரிகள் கட்ட அனுமதிக்கலாம் என்கின்றனர்.சிலை வைக்கப்படாத, கோயில் இல்லாத,அல்லது அப்படிப்பட்ட பொது இடங்களான வேறு ஏதாவது உண்டா ? நடை பாதைகளிலும் போக்கு வரதுக்கு இடையூறாக நடு ரோடு களிலும சிலைகளை வைத்துக்கொண்டு இருக்கும்போது.அரசு பொது இடமாக அறிவித்தால் அவ்வளவுதான் அங்கு சிலை வைத்து கோயில் கட்டுவது சிரமமா?...
Anuradha Sundararaman - Chennai,இந்தியா
2010-09-29 10:31:43 IST
இருக்கும் நிலத்தை இருவருக்கும் சமமாக பிரித்து கொடுத்தலே சரியான தீர்ப்பு என்பது என்னுடைய கருத்து. நாம் அனைவரும் பாரத தாயின் குழந்தைகளே! Jai hind!...
ர லலிதா - vizag,இந்தியா
2010-09-29 10:27:22 IST
நாளை நல்ல முடிவு வர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.manidha தன்மை ஓங்குக....
Natharsha ahmed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-29 10:21:44 IST
No Need That Evil Judgement pls,,,,,,,We Want PeaceFul India,,,Pls,,,Pls,,,Pls...
ச ர ஜார்ஜ் எர்நந்டழ் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-29 10:21:08 IST
சகோதரர்களே.. அயோத்தி நம் சொத்து..! இந்திய அரசு நம் பெற்றோர்.. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் சகோதரர்கள்.. சொத்து யாருக்கு எப்படி கிடைத்தால் என்ன...? நாம் பெற்றோருக்கு பணிதல் வேண்டும்... சிந்தியுங்கள் சகோதரர்களே..........
2010-09-29 10:20:44 IST
இருக்கும் நிலத்தை இருவருக்கும் சமமாக பிரித்து கொடுத்தாலே, பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து. எல்லோரும் இந்திய தாயின் மைந்தர்களே! Jai hind!...
தினேஷ் - Mumbai,இந்தியா
2010-09-29 10:20:40 IST
Pls anyone send again BRS Comments...
basheer - tamilnadu,இந்தியா
2010-09-29 10:19:47 IST
please, goverment holiday will give tommorow for babar masjid result...
sadiq - chennai,இந்தியா
2010-09-29 10:18:46 IST
அந்த இடத்தை ஒரு சுற்றுலா மையமாகவோ அல்லது முதியோர் இல்லமாக மாற்றிவிட்டால் சிறந்தது என்பது என்னுடைய கருத்து. இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு கோர்ட் தன் தீர்ப்பை சொல்லவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக சொல்ல கூடாது....
ramya - trichy,இந்தியா
2010-09-29 10:17:12 IST
....... indian is a gud country.... plz don't fight with others...
2010-09-29 10:13:48 IST
வேலைய போய் பாருங்கப , அந்த இடத்தில் பார்க் கட்டுங்க. அனைத்து மதத்தினரும் வந்து போவட்டும்...........
basheer - dubai,இந்தியா
2010-09-29 10:12:54 IST
அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறோம். நீதி மன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்...
தினேஷ் - Mumbai,இந்தியா
2010-09-29 10:08:29 IST
what Is BRS Comments pls tell me...
தண்டாயுதபாணி - தூத்துக்குடி,இந்தியா
2010-09-29 09:59:36 IST
சகோதர சகோதரிகளே. எல்லோருக்கும் நம்மை படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.தீர்ப்பு எப்படி இருந்தாலும் நம் நண்பர்களிடம் வன்முறையை உருவாக்க தூண்டிவிடாதீர்கள்,எந்தவித கலவரத்திலும் ஈடுபடக்கூடாது... உயிரின் அருமை உயிருக்காகப்போராடுபவர்களுக்கு அதிகமாகத்தெரியும்.(மருத்துவமனைகளில் உயிருக்காகப்போராடுபவர்கள் எத்தனையோபேர் மற்றும் சமீபத்தில் ஈழத்தில் எத்தனையோ உறவுகளைப்பறிகொடுத்திருக்கிறோம்).எனவே அமைதி காத்து மனிதநேயம் காப்போம்....
பஷீர் அம்பலம் - சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-29 09:57:43 IST
அன்பின் நண்பர்களே இந்த செய்தி பற்றி அநேகமான நண்பர்களின் கருத்து தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அதனை ஏற்கவேண்டும் என்பதும் இதனால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதுதான். நண்பர்களே பொதுமக்கள் கருத்து எப்படியாக இருந்தாலும் அரசியல் வாதிகளின் பார்வை வேறுவிதமாக இருக்கும் எப்படி இந்த தீர்ப்பினால் நமது கட்சி பயனடைய போகிறது என்கின்ற பார்வையாக தான் இருக்கும். எனவே தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நமது நாட்டின் மிகவும் உயர்வான நீதிமன்றம் எனவே நாம் அனைவரும் அமைதி காத்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து....
தவசீலன்.அ - கோல்ஹாபூர்மகாராஷ்டிராஇந்தியா,இந்தியா
2010-09-29 09:57:28 IST
நண்பர் துத்தூர் ஷாஜி அவர்களுக்கு நன்றி, தீர்ப்பு எதுவாயினும் அமைதி காப்போம். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் எல்லா மதத்தினரும் பயன்படுத்துகிற நூலகம், பூங்கா போன்றவை உருவாக்கலாம். இதனால் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினையும் பெறலாம். வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத மாதாகி ஜெய்!....
asha - covai,இந்தியா
2010-09-29 09:55:07 IST
எந்த தீர்ப்பாக இருந்தாலும் பரவா இல்லை. நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உடன் இருப்போம் ....
லக்ஷ்மணன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-29 09:50:26 IST
everyone have to obey judgement ....
தண்டாயுதபாணி - தூத்துக்குடி,இந்தியா
2010-09-29 09:40:45 IST
சகோதர சகோதரிகளே, எல்லோருக்கும் நம்மை படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. இந்த தீர்ப்பால் எந்த மனித உயிருக்கும் ஆபத்து வரகூடாது என்று அந்த ராம பிரன்னையும் அந்த அல்லாவையும் வேண்டுகிறேன். ஏசுகிருஸ்த்துவிடயும் வேண்டுகிறேன். உயிரின் அருமை உயிருக்காகப்போராடுபவர்களுக்கு அதிகமாகத்தெரியும்.(மருத்துவமனைகளில் உயிருக்காகப்போராடுபவர்கள் எத்தனையோ பேர்).எனவே மனிதநேயம் காப்போம்....
முத்து - sivakasi,இந்தியா
2010-09-29 09:33:26 IST
நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர வேண்டும்...
Prabhu - chennai,இந்தியா
2010-09-29 09:27:23 IST
please peaceful...
prakash - tirupur,இந்தியா
2010-09-29 09:26:55 IST
அனைத்து இந்தியர்களும் சாதி மத பேதமின்றி ஒன்றாக இனைந்து இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்க வேண்டியது நமது கடைமையாகும்....
இந்திரா - ஸ்ரீவைகுண்டம்,கிரிபாதி
2010-09-29 09:22:12 IST
சகோதர சகோதிரிகளே யாதும் ஊரே யாவரும் கேளீர். நம் தாய் திருநாடு அனைவருக்கும் சொந்தம். நம்மக்குள் வேண்டாம் சண்டை. ஒற்றுமையை இருப்போம் . உலகை ஆள்வோம். வந்தே மாதரம்...
Ramesh - Singapore,சிங்கப்பூர்
2010-09-29 09:19:34 IST
Dear Beloved Brothers & Sisters, My Humble request to all the people of our beloved country. Pls don't get emotion for the outcome of the verdict. It is mere only a judgment. All of you kindly note we are all Indians first & we all should proud about our nation & should try to maintain the peace & harmony of our country everywhere. All my beloved brothers/sisters who belongs to any religions whether Hindu/Muslim/Christians- Kindly note we are all first Indians & our country is one of the best cultured country in the world. In my personal experience i travelled all over the world & I proud to say India is the BEST. Let us join together & save the pride of the country. LET US DIE AS AN INDIAN. OUR MOTHER INDIA IS THE GREATEST OF ALL THE MOTHERS IN THE WORLD. JAI HIND JAI HIND JAI HIND. Regards, Ramesh Seshadri...
கலாம் - பட்சிபுரம்,இந்தியா
2010-09-29 09:12:44 IST
தீர்ப்பு பாரதத்தின் தன் மானத்தையும், மாண்பையும், பழமையையும் காப்பதாக இருக்க வேண்டும். வாழ்க இந்த புண்ணிய பூமி. ராம் ராம்.....
சாதி மத பேதமிலதவன் - அல்லாதெருஜீசஸ்ரோடுமுருகனூர்,இந்தியா
2010-09-29 09:06:11 IST
புலி வருது புலி வருது நு நாளைக்கு உண்மைலே புலி வர போஹுதா..சந்தோசம் .ஜீசஸ் அல்லா முருகன் எல்லா கடவுளுக்கும் ஒரே designation கடவுள். இந்த தீர்ப்பை எல்லோரும் மனதார ஏற்றுக்கொண்டு ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வது மானிட பண்பு. நீதிக்கு தலைவணங்கி ஏற்றுக்கொள்வோம்....
சயீத் - dammam,இந்தியா
2010-09-29 08:59:06 IST
பாபர் மஸ்ஜித் கண்டிப்பாக முஸ்லிம் மக்களுக்குத்தான். எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் வெற்றி தருவான் . எல்லோரும் தொழுது துஆ செய்யுங்கள். ஏன் என்றால் இந்திய சட்டப்படி 1947 இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் வணக்க தளங்கள் எவ்வாறு இருந்ததோ அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான். இந்திய சட்டம் உண்மை என்றால் இதுவும் உண்மையாக இருக்கும்.(அல்லாஹு அக்பர்)...
இந்தியன் - துபாய்குறுக்குதெரு,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-29 08:56:45 IST
ஹலோ இந்திய மக்களே நாம் எல்லோரும் பிறந்தது ஒரு தாய்,ஒரு தந்தை மூலம் தான் we are indian only ,We dont have any religion .நமக்குள் சண்டை வேண்டாம். ஒற்றுமையாக இருந்து சமாதானத்தை காப்போம்....
maitheen - kayalpatnam,இந்தியா
2010-09-29 08:52:48 IST
இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....
அமல்ராஜ் - chennai,இந்தியா
2010-09-29 08:43:54 IST
நாம் அனைவரும் இந்தியர் என்பதை மனதில் வைத்து இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். எல்லோருக்கும் சமாதனம் உண்டாகட்டும்.....
முகுந்தன் - மதுரை,இந்தியா
2010-09-29 08:39:26 IST
சவூதி விமான நிலையங்களில், திருக்குறளைக் கூட பறிமுதல் செய்கிறார்கள். முதலில் இந்துக்களை அவர்கள் மதிக்கட்டும். பிறகு அவர்களது மதத்தை(???) நாம் மதிக்கலாமா என ஆலோசிக்கலாம்!...
satheeshkumar - cochin,இந்தியா
2010-09-29 07:53:22 IST
திர்ப்பு எதுவா இருந்தாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும்..... அதான் மனித நாகரீகம்....
Peace - chennai,இந்தியா
2010-09-29 07:46:50 IST
இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ வந்தாலும் எல்லோரும் மனித இனம் என்பதை மனதில் வைத்து கொண்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். எனவே இரண்டு தரப்புக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பு வரவேண்டும் என்று அந்த ராம பிரானையும் அந்த அல்லாவையும் வேண்டுகிறேன். இந்த தீர்ப்பால் எந்த மனித உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.......
சரவணன் - பெங்களூர்,இந்தியா
2010-09-29 07:11:16 IST
நியாயமான தீர்ப்பு: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் அனாதை ஆஸ்ரமம் அல்லது இலவச பொது மருத்துவமனை அல்லது பல்கலைகழகம் கட்டப்பட்டு இலவசமாக நடத்தப்படவேண்டும்...
பாலா ஸ்ரீனிவாசன் - chennai,இந்தியா
2010-09-29 07:09:56 IST
ஒரு ஹிந்து என்கிற முறையில் தீர்ப்பு முஸ்லிம் சகோதரர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். 1920 இல் கேரளாவில் மாபிள்ளா கலகதின்போதும், 1948 ஹைதராபாத் ரஜாக்கர் கலகத்தின் போதும் , 1947 நவகாளி சம்பவங்களும் நடந்தவை மீண்டும் நடக்ககூடாது; அப்பாவி மக்கள் குழந்தைகள், பெண்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்...
மணி.வி - சென்னை,இந்தியா
2010-09-29 06:49:05 IST
கோர்ட் தீர்ப்பை மதிக்கும் காலம் மலையேறி விட்டது! இட ஒதுக்கீடு 50 %க்கு மிகாமல் இருக்க வேண்டும். வசதிபடைத்தவர்களுக்கு(கிரீமி லேயர்)இதன் பலன் கிடைக்க கூடாது என்ற தீர்ப்பை தமிழக அரசு ஒருநாளும் மதித்ததில்லை! காவிரித் தீர்ப்பை மதித்து கர்நாடகம் நீர் விடுகிறதா?பெரியார் அணை தீர்ப்புகளை கேரளா துச்சமாகத் தானே நினைத்து செயல்படுகிறது? அவ்வளவு ஏன்? ஷாபானு வழக்கு தீர்ப்பை சமாதிகட்டும் விதமாகத்தானே ராஜீவ் அரசு செயல்பட்டது? இதற்கெல்லாம் கோர்ட்டோ நடுவண் அரசோ நடவடிக்கை எடுத்ததுண்டா? எனவே அயோத்தி ஸ்ரீ ராமர் விக்ரகம் அகற்றப் படப்போவதுமில்லை. அபிஷேக, அர்ச்சனை,, ஆராதனைகள் தொடரும். மசூதி கட்டுவது பகல் கனவே!இந்தத் தீர்ப்பினால் நாட்டுக்கு எந்த ஆதாயமும் ஏற்படப் போவதில்லை!போய் அவரவர் வேலையைப் பாருங்களைய்யா!...
சேது - லொஸ்அன்கேலேஸ்,யூ.எஸ்.ஏ
2010-09-29 06:23:51 IST
இது காமன் வெல்த் விளையாட்டுக்கு பிறகு அறிவிக்கலாம். ஏன் இந்த அவசரம்?...
க.துரைராஜ் - சென்னை,இந்தியா
2010-09-29 06:22:59 IST
என் நாடு என் மக்கள் என் மதம் வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை..ஜெய்.....ஹிந்து...
ந.Varadharajan - PONDICHERRY,இந்தியா
2010-09-29 06:21:15 IST
தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும். கலவரம், உயிர்ச்சேதம் கூடாது. ராமனும் அல்லாவும் அனைவரையும் காக்கட்டும்...
P.RAMESH - Tirunelveli,இந்தியா
2010-09-29 05:54:20 IST
இரண்டு தரப்புக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பு வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் . இந்த தீர்ப்பால் எந்த மனித உயிருக்கும் ஆபத்து வரகூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.......
சிவசங்கர் துபாய் - துபாய்,இந்தியா
2010-09-29 01:51:47 IST
இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ வந்தாலும் எல்லோரும் மனித இனம் என்பதை மனதில் வைத்து கொண்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். எனவே இரண்டு தரப்புக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பு வரவேண்டும் என்று அந்த ராம பிரன்னையும் அந்த அல்லாவையும் வேண்டுகிறேன். இந்த தீர்ப்பால் எந்த மனித உயிருக்கும் ஆபத்து வரகூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்....
ப்ரவீன் - சென்னை,இந்தியா
2010-09-29 01:42:20 IST
முடிவு எதுவாக இருந்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அயோத்யா பூமி அனைத்து இந்தியனின் சொத்து....
sahul - dammam,சவுதி அரேபியா
2010-09-29 01:20:57 IST
சகோதர சகோதரிகலே, எல்லோரோக்கும் நம்மை படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. இந்த தீர்ப்பை கண்டிப்பாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்தவித கலவரத்திலும் ஈடுபடக்கூடாது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் நம் நண்பர்களிடம் வன்முறையை உருவாக்க தூண்டிவிடாதீர்கள் அதுவே எல்லோருக்கும் சிறந்தது...
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து
  • அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் மனு நிராகரிப்பு ; விரைவில் தீர்ப்பு
    2010-09-29 01:10:46 IST
    இந்தியர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக வாழனும் என்று நியாயமான கருத்துக்கள் சொல்லிய என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே நெஞ்சு குளிர்ந்தேன். உங்கள் சகோதர பற்றை நினைத்து. கண்டிப்பாக நல்ல தீர்ப்பே கிடைக்கும், என்றும் நாம் நல்ல சகோதர்களாக ஒற்றுமையாக வாழ்வோம்....
    நானும் ஒரு இந்தியன் - நியூயார்க்,United States
    2010-09-29 00:22:05 IST
    நண்பர்களே, இது காங்கிரசுக்கு பெருத்த ஏமாற்றம். இந்த பிரச்னையை வைத்து நாட்டை துண்டாடி இரு பிரிவினரின்யும் பிரித்து ஆண்ட 60 ஆண்டு காலம் இந்தியாவை சீரழித்து விட்டது. வெளியில் சொல்லாவிட்டாலும் உண்மையான மத ரீதியான அமைப்பு காங்கிரசே. இந்த தீர்ப்பினால் இரு பிரிவினரும் ஒற்றுமையாகவே இருப்பார்கள். ஆனால் காங்கிரசின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நாம் அனைவரும் அமைதி காத்து இதுவரை இல்லாத அளவும் மற்ற நாடுகள் பொறமை படும்படியும் நண்பர்களாக தொழர்களாக இருப்போம்....
    manithan - losangeles,United States
    2010-09-29 00:11:48 IST
    நாம் அனைவரும் இந்தியர்கள். நமது ச‌கோதரத்துவம் மிகவும் அவசியம். ஆகவே அனைவரும் தீர்ப்பு அன்று அமைதி காக்க வேண்டும். சில அரசியல் வாதிகள் அவர்களுடைய லாபத்திற்காக நம்மை மத சாயம் புசி தூண்டுவார்கள். அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்......
    பழனிவேலு.V - சவுதிஅரேபியா,India
    2010-09-28 22:16:14 IST
    யாவரும் ஒன்றே யாவரும் ஒரு தாய் மக்கள், ஆம் அது தான் நம் பாரத மாதா.,,,, ஒன்று பட்டு வாழ்வோம்,,,,, ஜெய் ஹிந்த்...
    கே sivakumar - chennai,India
    2010-09-28 22:09:47 IST
    அந்த தீர்ப்பு எதுவானாலும் நம் மாநிலத்தில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்தால் சரி....
    காதர் - ரியாத்saudia,India
    2010-09-28 22:01:10 IST
    தம்பி மணி , யாரும் யாருக்கும் சளைத்தவனில்லை . நாங்களும் உன் இனம் தான். இதற்கு தீர்வு வந்தால் அரசியல் ஆதாயம் தேடும் பிஜேபி கட்சிக்கு தான் ஆபத்து, சோனர்களுக்கு இல்லை ( தஞ்சை கல்வெட்டில் முஸ்லிம்களின் பெயர் ).. ராஜா ராஜா சோழன் கட்டி கொடுத்த பள்ளி வாசல் தஞ்சையில் உள்ளது . சென்று பார் ......
    karthikeyan - chennai,India
    2010-09-28 21:57:46 IST
    No relegion is greater than the relegion of humanity and no service is greater than the service to his mother land.....................be practical we are all human beings. this earth is ours let we all live together and enjoy our life together forget about this idiotic things.if muslim got favour judgement let us congr them .if hindu got favour judgement let us congr them.if no one got judgement favour let us cong the honarable judge....
    santha - chennai,India
    2010-09-28 21:31:54 IST
    பிரச்சனைக்குரிய இடம் மதசார்பற்றதாக அறிவிக்கப்பட்டு ,பொதுப்பணிக்கு பயன்படுத்த அறிவுருத்தப்பட்டால் .வாழும் இந்தியா ,வளரும் பொருளாதாரம் ,உலகில் வல்லரசாகி ,நல்லரசாகும் .ஜெய்ஹிந்த ....
    nallavan - TRICHY,India
    2010-09-28 21:27:38 IST
    நீதிக்கு தலை vanangu . நமக்கு நம்மை சார்ந்த மதத்திற்கு நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும்....
    2010-09-28 21:27:18 IST
    நல்ல தீர்ப்பாக இருக்கட்டும்.அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அமைதி காக்க வேண்டும்....
    RADHAKRISHNAN - நாகர்கோயில்,India
    2010-09-28 21:23:40 IST
    Come again Krishna...... save the world.... come again Jesus.......... save the world.... Come again Allah........... save the world... I hope and pray for peace in the world....Vanthe Maatharam......
    ஜகுபர் கனி - dubai,United Arab Emirates
    2010-09-28 21:04:25 IST
    இந்த தீர்ப்பை உலக நாடுகள் பார்த்து கொண்டு இருகின்றன .இந்தியாவின் ஜனநாயகம் கேள்வி குறி ஆகாமல் பார்த்து கொள்வது நீதிமன்றத்தின் தலையாய கடமை ....

கருத்துகள் இல்லை: