திங்கள், 26 ஜூலை, 2010

மனோ கணேசன் சீற்றம்,TNA தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி அல்ல

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி த.தே.கூ அல்ல. மனோ கணேசன் சீற்றம்.

இலங்கையில் இடம்பெறவுள்ள யாப்பு மாற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக பேசப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்று உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் , யாப்பு மாற்றம் தொடர்பாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் பேச்சுவார்தை மேற்கொள்வதை தவிர்த்து சகல தமிழ் கட்சிகளுடனும் பேசவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஒரு தொகுதியினரை மாத்திரமே பிரதிநிதித்துவப் படுத்துவதாக தெரிவித்துள்ள அவர் அரசாங்கமாக இருந்தால் என்ன எதிர்கட்சியாக இருந்தால் என்ன இவவாறான முக்கியமான விடயங்களில் நாட்டின் மலையகத் தமிழ் கட்சிகள் மற்றம் வடகிழக்கிலுள்ள அனைத்துக்கட்சிகளுடனும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: