திங்கள், 26 ஜூலை, 2010

25 வயதான யுவதி, நீதிபதியின் இரத்மலானை வீட்டில் பணியாற்றியவேளை

யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: நீதிபதியை விசாரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீதிபதியொருவரை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு கோரியுள்ளது.

நுவரெலியா, சாந்திபுர தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான மேற்படி யுவதி, குறித்த நீதிபதியின் இரத்மலானை வீட்டில் பணியாற்றியவேளை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜூன் 28 ஆம் திகதி பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகாரிடப்பட்டது
.
அந்த யுவதியை பொலிஸார் சட்ட மருத்துவ அதிகாரியின் சோதனைக்கு உட்படுத்தினர். அதையடுத்து குறித்த யுவதி உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கான தடயங்கள் உள்ளதால் விசாரணையை தொடருமாறு சட்ட மருத்துவ அதிகாரி அறிவுறுத்தினார்.
குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியின் மனைவி மற்றும் அவ்வீட்டிலுள்ள மற்றொரு பணிப்பெண் ஆகியோரிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
http://www.tamil.dailymirror.lk

கருத்துகள் இல்லை: