சனி, 31 ஜூலை, 2010

கார்த்தி நடிகருக்கு பெண் கொடுக்க தயங்குகிறார்கள்

சினிமா நடிகருக்கு பெண் கொடுக்க தயங்குகிறார்கள்:நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், ‘’எங்கே போனாலும் உங்களையும், தமன்னாவையும் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறதே... வருத்தம் இல்லையா?’’என்று கேட்டதற்க
’’அதில் உண்மை இல்லை. வெறும் வதந்தி. பிறகு எதற்கு வருத்தப்பட வேண்டும்? பிரபலமாகி வருபவர்களை பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது என்று சுலபமாக எடுத்துக்கொள்கிறேன
. எந்தவிதத்திலும் நான் வருத்தப்படவும் இல்லை.

கவலைப்படவும் இல்லை. இந்த வதந்தி ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன்.
உங்களுக்கு பெண் பார்ப்பதாக கேள்விப்படுகிறோம்.
உண்மையா?என்ற கேள்விக்கு,
’’ உண்மைதான். எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது. வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக்கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்.
சினிமா நடிகருக்கு பெண் கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள்.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், என்ஜினீயர், நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும், என்ஜினீயரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: