சனி, 31 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் அமைக்கப்பட உள்ளது்,மன்மோகன் சிங்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீடு.ராசா உட்பட மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இலங்கையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கு நேரடியாக உதவலாம் என்கிற அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: