புதன், 28 ஜூலை, 2010

இலங்கை கடற்படையினர தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றிபடகில் வந்து செல்லும

ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றிபடகில் வந்து செல்லும் இலங்கை கடற்படையினர் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் இலங்கை மீனவர்கள்,படகில் தனுஷ்கோடி வந்து இங்குள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தொடர்பாக இங்குள்ளமீனவர்களும் இதுவரை புகார்செய்யவில்லை. இலங்கை மீனவர்களால் பிரச்னை எதுவும் ஏற்படாத நிலையில்,புலனாய்வுத்துறையினரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தடையேதும்இல்லாததால், இலங்கை மீனவர்கள் தனுஷ்கோடிக்கு வந்து செல்வதும் தொடர்கிறது.
இந்நிலையில், சமீப காலமாக இலங்கை கடற்படையினரும்படகில் தனுஷ்கோடி வருவதுவழக்கமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன் இலங்கை கடற்படை வீரர்கள் சிலர், ரோந்து செல்லும் கேஸ்போட் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இந்திய கடல் எல்லை அமைந்துள்ள ஐந்தாம் மணல் திட்டு வரை வந்த இலங்கை கடற்படையினர், தனுஷ்கோடி கடற்கரையில் கரையிறங்கி, இங்குள்ள சிறுகடைகளில் தங்களுக்கு தேவையான பிஸ்கட்,சிகரெட், பீடி, குளிர்பானங்களை வாங்கி கொண்டு, இலங்கை மற்றும் இந்திய பணத்தை கொடுத்து சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் வந்தது குறித்து ஆரம்பத்தில் கவனம் செலுத்தாத மீனவர்கள், கடற்படையினரின் வருகை தொடர்ந்ததால் இவர்களின் ஊடுருவல் குறித்து தகவல் கொடுத்தனர் ."ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினரின் கண்காணிப்பையும் மீறி,பகல் நேரத்திலேயே இந்திய கடல் எல்லை தாண்டி தனுஷ்கோடிக்கு ஆயுதங்களுடன் இலங்கை கடற்படையினர் ஊடுருவியது, எதற்காக அடிக்கடி தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர் என்பது குறித்து,' மத்திய,மாநில புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ப.raj - chennai,இந்தியா
2010-07-28 08:07:27 IST
எனக்கு ஒரு சந்தேகம் ... இது வரை 500௦௦ க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை கொன்று குவித்துள்ளனர் இலங்கை ராணுவம் மற்றும் மீனவர்கள். இந்திய ராணுவம் இலங்கை மீனவர்கள் எல்லை மீறும் பொது எதாவது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு இலங்கை மீனவனையவது காயபடுத்தி இருகிறர்களா? இல்லை அவர்கள் எல்லை தாண்டியதே இல்லையா ? அவளவு நல்லவர்களா ? இல்லை நம் கடற்படை சரிய்ல்லையா?...
Aarasan - Chennai,இந்தியா
2010-07-28 07:53:14 IST
எங்கே அந்த நாராயணன், மேனன். இந்திய ராணுவம் என்ன செய்கிறது. தனுஷ்கோடியும் இலங்கையை சேர்ந்தது என்று சோனியா காங்கிரசும், கையாலாகத இந்திய ராணுவமும் முடிவு எடுத்துவிட்டார்கள். அந்த பாதுகாப்பு கைத்தடிகளையும், அசின், பிசின், சரத்குமார் போன்றவர்கையும் வைத்து விழா எடுக்கசொல்லுங்கள்....
பlamu - trichy,இந்தியா
2010-07-28 07:53:01 IST
ithu ஆரம்பm மட்டும் than..inimel than sinkal சீனாவின் சித்து vilayattu ஆரம்பம் தொடர போகுது.m...
சஞ்சீவ் - bangalore,இந்தியா
2010-07-28 07:16:39 IST
தமிழக அரசும், மத்திய அரசும் ... ஒரு சொம்பு அரசை விட்டதோ....
Mohanraj - TaipeiTaiwan,இந்தியா
2010-07-28 07:06:10 IST
Central and State Govt... go to Hell.........
singam - namakkal,இந்தியா
2010-07-28 06:12:13 IST
கேவலம் .....................
V.Subbarao - Singapore,இந்தியா
2010-07-28 06:07:23 IST
இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையினருக்கு செய்தி கொடுத்து பின் வருகிறர்கள என உறுதி செய்யவும். அவர்கள் பல காலங்கலாக வருவது தெரியாத நிலையில் இந்திய கடல்படையினர் இருப்பின், அவர்களின் கண்காணிப்பில் இப்பகுதி இருப்பின் என்ன பயன் ?...
பாரதி - raleigh,இந்தியா


இப்பொ அசினுக்கு நல்ல பப்ளிசிட்டி.. கரகாட்டக்காரனில் செந்தில் சொல்வது போல ஒரு வெளம்பரம்....
sugadev
கடந்த காலத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரையுலகினால் நடத்தப்பட்ட போராட்டங்களை அலட்சியப்படுத்திப் புறக்கணித்த நடிகர்களின் திரைப்படங்கள் புலம்பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியைத் தழுவின என்பது அறிந்ததே./// இவங்க நம்மளை விட பயங்கரமான சினிமா பைத்தியங்க போல. வேறென்ன சொல்ல?
albert
போராட்டமா, அமெரிக்காவிலா? சும்மா தமாசு பண்ண கூடாது. ஓடும் படம் ஓடும் கண்டிப்பா. இவங்களால் ஒண்ணும் பண்ண முடியாது, எல்லாம் வெறும் சவடால்.
albert
அட, அசின் போனது அவங்க வேலைய பார்க்க, அதில் என்ன தப்பு? போயி அவங்க அவங்க வேலைய பாருங்கப்பா, இப்படி சும்மா தமாசு பண்ணிகிட்டு இராமல்.
5 hours ago | Report abuse
albert
ஃபெட்னா அப்படின்னு மொத்தமா சொன்னா எப்படி? ஃபெட்னா எனும் பெயரில் எழுதும் புலி ஆதரவாளர்கள்ன்னு சொல்லுங்க.

கருத்துகள் இல்லை: