சனி, 31 ஜூலை, 2010

ஜெய்ய்..,யிக்கிறது தெலுங்கானா தனி மாநில கோஷம்; டி.ஆர்.எஸ்.,- 6 ; பா.ஜ.,-1; காங்.,- 0

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளில் ‌தெலுங்கானா ராஷட்ரிய சமிதி கட்சி 6 இடங்களையும், பா.ஜ., 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆணை பிறப்பித்து திரும்ப பெற்றது. இதனால் மாநிலத்தில் பெரும் கலவரம், வன்முறை வெடித்தது. இதில் காங்., தெலுங்குதேசம், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தனது செல்வாக்கை தெலுங்கானா மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி இந்த 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்களுக்கு உற்சாக பானம். கவர் கவனிப்பு, மற்றும் பிரியாணி என பல விதங்களில் கவர்ந்து இழுக்கப்பட்டனர். வீட்டுக்கு , வீடு யாருக்கும் தெரியாமல் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பின் செய்து போடப்பட்டது. இந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.

தேர்தல் நடந்த தொகுதிகள் வருமாறு : சிர்புர், சென்னூர், மான்செரியல், நிஜாமாபாத், தர்மபுரி, வெமுலவாடா, சித்திபேட் , எல்லாரெட்டி, கோர்த்தலா, சிர்சில்லா, ஹூசுராபாத், வாரங்கல் (மேற்கு), ஆகிய 12 தொகுதிகள் அடங்கும். முதலில் முறையே 7 தொகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரம் மூலமும் ஏனைய 5 தொகுதிகளில் ஓட்டுச்சீட்டு முறையும் பின்பற்றப்பட்டன. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், ஆரம்பம் முதலே 11 தொகுதிகளில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர். ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.., முன்னிலை வகிக்கிறது.

ஆந்திர மாநில காங்., தலைவர் சீனிவாசன் தோல்வியுற்றுள்ளார்.  காங்கிரஸ், மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியினர் ஒரு இடத்தில் கூட முன்னேற முடியவில்லை. மொதத்தில் இந்த இடைத்தேர்தலில் ஜெய் தெலுங்கானா கோஷம் ஜெய்ய்..., யிக்கிறது.

தமிழன் - madurai,இந்தியா
2010-07-30 22:01:40 IST
இதே தோல்வி காங்கிரேச்சிக்கு தமிழ் நாடிலும் கிடைக்கும் , பி tamilan...
அப்துல் ரவூப் - abudhabi,இந்தியா
2010-07-30 20:46:24 IST
மக்கள் தங்கள் கோரிக்கையை மிக வலுவாஹா எழுப்பி இருக்கிரர்ஹல்...
பீட்டர் - CHENNAI,இந்தியா
2010-07-30 20:16:27 IST
தீவிரவாதிகளின் கட்சி (காங்கிரஸ்) ௦ ஜீரோ... மிக்க மகிழ்ச்சி.......
இந்தியன் - chennai,இந்தியா
2010-07-30 19:53:43 IST
Sorry கதர் அமீர் - kualalumpur,மாலத்தீவு, Don't follow CM words. I am follower of DMK, evnethough I am telling don't lisition CM desicion (ஜாதி வாரி கணக்கெடுப்பு). One day it will split Tamil Nadu. I allways say Be Indian, sameway Be Tamlian. Because we have to live togeather enjoy human life. This life is like bottel glass, Once break we can't joint togeather. ஜாதி is worst to split people. Ramadas and Kaduvetti all are looking there home development. People need to understand. Be happy and live togeather....
A NAGAMANI - CHENNAI,இந்தியா
2010-07-30 19:28:54 IST
TRS jeyithuvilldhu telungana state udane uhyamagavendum...
ramkumar - chennai,இந்தியா
2010-07-30 19:19:51 IST
இது உண்மையான தேர்தல். வாக்கு சீட்டு வைத்தால் காங்கிரஸ் தோற்துவிடும். மிஷின் வைத்தால் தில்லு முள்ளு செய்து காங்கிரஸ் ஜெயித்துவிடும் . நல்ல வேலை தில்லு முள்ளு நவீன் சாவ்லா இல்லை...
இரா.கோதண்டபாணி - Chennai,இந்தியா
2010-07-30 18:57:32 IST
மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தெலுங்கான தனியாக பிரித்துக் கொடுத்து விட வேண்டியதுதான். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மாநிலங்களையும் பிரித்தால்தான் மக்கள் நலன்களை சரிவர நிறைவேற்ற முடியும். ஆந்திர உண்டாகும் பொழுதே தெலுங்கான கோரிக்கை எழுந்தது. அதற்குப் பிறகும் போராட்டங்கள் வந்தது. முன்னாள் பிரதமார் திரு நரசிமராவ் டெல்லி அரசியலுக்கு மாறியதே இந்த பிரச்சனையால் தான். அங்குள்ள மக்கள் தெளிவாக தங்கள் கருத்தை தெரிவித்து விட்டார்கள். காங்கிரஸ் இனியும் காலம் தாழ்த்துவது தேவை இல்லாத ஒன்றுதான்....
jaykay - india,இந்தியா
2010-07-30 18:53:11 IST
தமிழ்நாட்டுக்கு பீடை பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆந்திராவிற்கு இப்பொழுது பிடிக்க ஆரம்பித்திருகிறது....
பா.சரவனகார்த்திக் - Rajapalyam,இந்தியா
2010-07-30 18:04:37 IST
இதுதான் மக்கள் தீர்ப்பு என்பது!! மக்கள் என்றும் மடையர்கள் அல்ல என்பதை பல சமயம் நீருப்பித்து வருகின்றனர்!! அது போலத்தான் இதுவும்!! மக்களுக்கத்தான் அரசே தவிர அரசுக்காக மக்கள் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் ஆகவே உடனடியாக மக்களின் உணவிற்கு மதிப்பு கொடுத்து மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி அரசு மக்களுக்க்காகத்தன் என்பதை உணரவைக்க வேண்டும் !!! ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்...
INDRAJIT - Benares,இந்தியா
2010-07-30 16:25:32 IST
பொட்டி ஸ்ரீராமுலு செத்துப் பெற்றுக் கொடுத்த ஆந்த்ரா போலில்லை இது ! நல்ல வெற்றியல்ல இது. பின்னால் தொடரப்போகும் பல பாதகங்களின் அறிகுறிதான் இது ! பாவம் ! ஆந்திரச் சகோதரர்கள் ! மிகப் பெரிய இழப்புகளுக்குத் தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் அவர்கள். ஆந்த்ராவை ஏழரைச் சனி ( சந்திரசேகர ராவ் ) பிடித்துவிட்டது !...
kaMALESH - CHENNAI,இந்தியா
2010-07-30 14:50:58 IST
வெல்க பிஜேபி...
கொண்டா ராஜு - hyderabad,இந்தியா
2010-07-30 14:31:18 IST
மக்கள் பணம் வீணடிப்பு. செல்வாக்கு உள்ள இடத்தில ராஜினாமா செய்வது பிறகு பணம் கொடுத்து செய்கிறது....
nagarajan - saudiarabia,இந்தியா
2010-07-30 13:59:09 IST
i think in the andera pradesh must be divide 2 states....
மலைச்சாமி kanikkoor - abudhabiuae,இந்தியா
2010-07-30 13:39:52 IST
ஆந்திர மக்கள் சிந்தித்ததை தமிழ் மக்கள் சிந்திக்கவில்லை .விரைவில் தமிழ் நாட்டிலயும் காங்கிரஸ்க்கு தக்க பதில் அளிப்பார்கள்...
siva - tirupur,இந்தியா
2010-07-30 13:24:08 IST
சபாஷ் மக்களே. தெலுங்கான மக்களுக்கும் , சந்திரசேகர் ராவ் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பணநாயகதை ஜனநாயகம் வென்றிருக்கிறது. பணம் மற்றும் இலவசங்கள் எல்லா இடத்திலும் மதிப்பு பெறாது மற்றும் வெல்லாது. காங்கரஸ் பொய்வேஷம் அணைத்து மக்களுக்கும் புரிய வேண்டும். காங்கிரஸ் இனியாவது திருந்தவேண்டும். சிவா-திருப்பூர்....
ச.ரவி KUMAR - HYDERABAD,இந்தியா
2010-07-30 13:07:49 IST
காங்கிரஸ் மீண்டும் ஒரு முறை கோஷ்டி பூசல் நடத்தி தன தலயில் தானே மண்ணை வாரி போட்டுகொண்டது என்ன ஜெயில் டிராமா நடத்தினாலும் என்னதான் யாத்திரை போனாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. பார்ப்போம் இந்த முறையாவது இவர்கள் என்ன பண்றங்கன்னு?...
Rajesh - Madurai,இந்தியா
2010-07-30 12:17:04 IST
இங்கேயும் இடைதேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆந்திர மக்கள் பணம் கொடுத்தாலும் நல்லவரை தேர்தேடுகிரார்கள். ஆனால் நம் மக்கள் கண்மூடி தனமாய் இருக்கிறார்கள் . ஓட்டளிக்கும் உரிமையை சரியாய் ஆந்திர மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் . வாழ்க ஜனநாயகம் !...
கதர் அமீர் - kualalumpur,மாலத்தீவு
2010-07-30 11:39:16 IST
ஜாதி வாரி கணக்கெடுப்பு முதல்வரின் முடிவு நல்ல ஒரு ஆரோக்கியமான முடிவு எந்த ஜாதி யந்த இடத்தில் இருப்பதை காணலாம் மருத்துவர் ராமதாஸ் வரவீர்பரா பதிலை பார்க்கலாம் நன்றி தினமலர்...
மதுரைக்காரன் - tamilnadu,இந்தியா
2010-07-30 10:48:47 IST
ஜெய் தெலுங்கான கோஷம் வெற்றி வாழ்த்துக்கள் மக்களே ... வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்கள் தங்கள் தமிழ் இன மானத்தை கண்டிப்பாக காட்டி ... "" தன்மான தமிழன்"" கோஷத்தை வெற்றி பெற வைப்பார்கள்..... நம்பிகையுடன் ஒரு தமிழன் ......

கருத்துகள் இல்லை: