திங்கள், 26 ஜூலை, 2010

நடிகை மீராவாசுதேவனுக்கு விவாகரத்து கிடைத்தது

உன்னைச்சரணடைந்தேன் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மீராவாசுதேவன் மும்பையைச்சேர்ந்தவர்.  
தமிழில் தொடர்ந்து நடித்துவந்ததால் இவர் சென்னையிலேயே தங்கியிருந்தார்.   பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் இவருக்கும் காதல் உண்டானது. 2005ல் திருமணம் செய்துகொண்டனர்.

கருத்து வேறுபாட்டால் 2008ம் ஆண்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் மீரா.  ஆனால் மீராவை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று பதில் மனு தாக்கல் செய்தார் விஷால்.
இரண்டு வருடங்களாக இவ்விருவரிடமும் அவ்வப்போது சமரச முயற்சி செய்துபார்த்தனர்.

முயற்சிகள் பலனிக்கவில்லை.   இதையடுத்து நீதிபதி டி.ராமலிங்கம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
ஜீவனாம்சம் எதிர்பார்க்கிறீர்களா?என்று மீராவிடம் நீதிபதி கேட்டார்.   வேண்டாம்;அதை எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டார் மீரா.


கருத்துகள் இல்லை: