திங்கள், 26 ஜூலை, 2010

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை

வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன. தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: