வியாழன், 29 ஜூலை, 2010

உலகின் முதற்பெண் பிரதமர் சிறிமாவிற்கு ஜனாதிபதியால் சுவர்ணாபிமான அவர்ஜனா பொன்விழா உயர்மரியாதை

உலகின் முதல் பெண்பிரதமர் என்ற அழியாப் புகழ் பெற்ற அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சுவர்ணாபிமான அவர்ஜனா என்ற பொன்விழா உயர்மரியாதையினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்.

அலரி மாளிகையில் இன்று (28) மாலை இடம்பெற்ற இவ்விசேட நிகழ்வில் சிறிமாவோ அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: