திங்கள், 15 அக்டோபர், 2018

சிதம்பரம் 3 ஆயிரம் நடன கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் 

tamil.thehindu.com : சிதம்பரம் நடராஜர் கோயிலில் சபாபதி சங்கீத கான சபா டிரஸ்ட் சார்பில் நவராத்திரி சம்பூர்ண இசை விழா இம்மாதம் 9-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் பரத நாட்டியம் பயின்ற மாணவிகள் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத் தில் பகுதி, பகுதியாக உள்ளேயும், வெளியேயும் பரத நாட்டியம் ஆடினர். இதில் 6 வயதிலிருந்து 10 வயது வரை உள்ளவர்கள் பல்லவிக்கும், 11 வயதிலிருந்து 15 வயது வரை உள்ளவர்கள் அனுபல்லவிக்கும், 16 வயதிலிருந்து 20 வயது வரை சரணத்துக்கும், 21 வயதிலிருந்து 60 வயது வரை உள்ளவர்கள் கீர்த்தனை சரணம் பாடலுக்கும் பரத நாட்டியம் ஆடினர்.

மேலும், ஒரே சமயத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்துக்கு உள்ளே செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டு தவித்தனர். உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழியாக இருந்ததால் நாட்டிய கலைஞர்கள் சிரமப்பட்டனர். கலைஞர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். இதனால் அங்கு கூச்சல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி பாண்டியன் மற்றும் போலீஸார், நெரிசலில் சிக்கிய நாட்டிய கலைஞர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த னர்.
<

கருத்துகள் இல்லை: