ஞாயிறு, 11 ஜூன், 2017

திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார்! ஆனால் உண்டியல்ல காசு போட ஆதார் தேவை இல்லை ... கோவில்கள் வர்த்தகம் என்பது நிருபணம்!

TIRUPATI - BALAJI- IS A JAIN( சமணர்) TEMPLE OF DRAVID CIVILIZATION.
ஆதார் இருந்தால்தான் திருப்பதி லட்டு!பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிற நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்கவும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜூன் 9) வருமான வரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஆனால், சமூக நலத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  www.prearyan.blogspot.ca/2010/03/tirupati-balaji-is-jain-temple-of.html

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு, தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு தரிசனத்துக்கும் வழிவகை செய்யப்படும். சிறப்பு தரிசனத்துக்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 113 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கும் ஆதார் எண் விரைவில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: