வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டை தடை செய்ய போராடும் பீட்டாவின் ரத்த கறை படிந்த முகம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தடை வாங்கியிருக்கியது, விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA – People for the Ethical  treatment of animals ) .
தற்போது இந்த அமைப்பை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
”ஜல்லிக்கட்டு” என்பது பிற்போக்குத்தனம் என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டு மிராண்டித்தனம் என்றும் பீட்டா நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ளது. இந்த பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகை.

ஆம், சர்வதேச அளவில், விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஓரு நிறுவனமாக தன்னை காட்டிக்கொள்ளும் பீட்டா அமைப்பு, 1980ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் மாகாணத்தில் தொடங்கப்பட்டது.  விலங்குகளை உண்ண கூடாது, அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்த கூடாது, விலங்குகளை வைத்து எந்த மருத்துவ ஆய்வும் செய்யக் கூடாது என்பது தான் இவர்களின் முக்கியக் கொள்கை. அதே சமயம்  செல்லப்பிராணிகளை வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே பீட்டாவின் மிகப் பெரிய  மூலதனம்.
இந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த  35 வருடங்களில் சுமார் 30 லட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். லாப நோக்கு இல்லாத அமைப்பாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த ’பீட்டா’ வருடத்திற்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது.
காரணம், விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்குப் புகலிடம் அளிக்கும் சரணாலயமாக ‘பீட்டா’ செயல்படுகிறது என்று மக்களிடம் நிலவும்  நம்பிக்கை தான்.  ஆனால் உண்மையில் ‘கருணைக் கொலை’ என்ற பெயரில் விலங்குகள் இனத்தையே பீட்டா’ அழித்து வருவதாக  குற்றம்சாட்டப்படுகிறது.
’பீட்டா’ வின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் ‘நேதன் இனொக்ராட்’ என்ற சமூக ஆர்வலர். ஹஃபிங்டன் போஸ்டில் வெளியான  கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அதிர வைக்கிறது
* பீட்டா நிறுவனத்தின் மாகனங்களில் விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன.
* கொல்லப்படும் சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே இயக்கி வருகிறது பீட்டா நிறுவனம் .
* 2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96 சதவீதம் வீட்டு விலங்குகளைக் கொன்றுள்ளது ‘பீட்டா’. அதேபோல 2012-ஆம் ஆண்டு 602 நாய்கள், 1,045 பூனைகளைக் கொன்று குவித்துள்ளது.
*மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம்  விலங்குகளைக் கொன்று குவித்துள்ளது ’பீட்டா’.
* கருணைக் கொலை என்ற பெயரில் அமைதியாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமில்லாமல் அப்புறப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தின் பால் சந்தை, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஒரு பெரிய வர்த்தகம். ஜல்லிக்கட்டு காளைகள் தான் தமிழகத்தை பொறுத்தவரை, இன விருத்திக்கு முக்கியமானவை.
ஜல்லிக்கட்டை அழித்து விட்டால், நாட்டு காளைகள் இனம் அழிய தொடங்கி விடும். இதனால் கலப்பின காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர முடியும். ஜல்லிக்கட்டை இவ்வளவு தீவிரமாக பீட்டா எதிர்ப்பதற்கு இது தான் காராணாம் என்ற கருத்து நிலவுகிறது. இதன் பின்னணியில் , மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் இருப்பதாகச் கூறப்படுகிறது  லைவ்டே

கருத்துகள் இல்லை: