திங்கள், 16 ஜனவரி, 2017

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி :அதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதி; நடராஜன், திவாகரன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

அதிமுகவை கைப்பற்ற மன்னார்குடி குடும்பம் சதி செய்கிறது; உண்மையான வரலாற்றை திரித்து பேசும் நடராஜனும் திவாகரனும் அதிமுக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமைக்கு எதிரான கலகக் குரலாக கேபி முனுசாமி வெளியே வந்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி கூறியதாவது:
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர்கள் தற்போது கட்சியை கைப்பற்ற துடிக்கிறார்கள். பொங்கல் விழாவில் திவாகரன் பேசும்போது 1972-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எஸ்.டி.சோமசுந்தரம், நடராஜன் பங்கும் பெரியது என கூறியுள்ளார்.< இது மன்னிக்க முடியாத அபத்தமான பேச்சு. எஸ்.டி.சோமசுந்தரம் தேர்தல் களத்தில் பணியாற்றினார். நானும் 10 பூத்துக்களில் பணியாற்றினேன்.
இரட்டை இலையை ஜெயலலிதாவிடம், ஜானகி அம்மா கடிதம் எழுதி ஒப்படைத்தார்கள். இந்த மாதிரி உண்மையான வரலாறு இருக்கும்போது நடராஜன் என்ன பாடுபட்டடாரு? திவாகரன் என்ன பாடுபட்டாரு?
இவ்வாறு முனுசாமி கூறினார். tamiloneindia

கருத்துகள் இல்லை: