புதன், 18 ஜனவரி, 2017

பீட்டா சவால் : தமிழர்களால் ஜல்லிகட்டு நடத்த முடியாது! பூர்வா ஜோஷ்புரா சவால் . அத்தனை பார்ப்பானும் சவால்?

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க கோரியும்,  தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைதொடர்ந்து நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பீட்டா அமைப்பு செயல் அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா, தமிழர்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்று இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், பீட்டா உலகம் முழுவதும் உள்ள ஒரு அமைப்பு. தமிழர்களால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போராட முடியாது. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும்  நான் வெளிப்படையாக விடும் சவால் என்று கொக்கரித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் உட்பட தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: