புதன், 18 ஜனவரி, 2017

சாக்கடைதான் பொறுக்கிகளுக்கு ஏற்ற இடம்;தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் சு.சாமி…

2
ஜல்லிக்கட்டு விவகாரமோ, ஈழ தமிழர் விவகாரமா, அல்லது காவிரி தண்ணீரோ, முல்லை பெரியாறு அணை பிரச்சனையோ என்று தமிழர் நலன் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை எள்ளி நகையாடி ட்வீட் இடுவதை, தன்னுடைய முதற்கட்ட பணியாக பாரதீய ஜனதாவின் ராஜ்யசபா உறுப்பினர் சுபிரமணிய சாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தைய ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போதும், இளைஞர்களின் தொடர் போராட்டத்தின்போதும், தமிழர்களை பொருக்கி என்று விளித்து வந்த சு.சாமி,  போராட்டங்கள் தீவிரமடைந்தபோது மிக கேவலமாக விமர்சிக்க தொடங்கினார்.
அதில் சிலவற்றை இங்கே உங்களுக்காகத் தொகுத்து அளித்திருக்கிறோம்.

**************
1
தேச பற்று சார்ந்த ட்வீட்களுக்கு, வன்முறையான முறையில் எதிர்வினையாற்றும் பொறுக்கிகள், அவர்களுக்கு முகவரியை வெளியிட வேண்டும். அப்போதுதான் தேசிய புலனாய்வு நிறுவனம் மூலம் விசாரிக்க முயும்.
**************
2

நகரத்தின் சாக்கடைதான் பொறுக்கிகளுக்கு ஏற்ற இடம்.  பீட்டா எதற்க்காக ஜல்லிக்கட்டை குறி வைக்கிறது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டி இருக்கிறது.
**************
3

*போலீஸ் உங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் முன் ஓடி விடுங்கள் பொறுக்கிகள் மற்றும் எலிகளே (எலி என்பது ஈழத்திற்காக போராடுபவர்களை குறிக்கும் சுசாவின் சொல்)
*போலீசின் அடிதாங்க முடியாமல், சாக்கடைகளுக்குள் சென்று பதுங்கி கொண்டிருக்கிறார்கள் பொறுக்கிகள்.
**************
4

ஜல்லிக்கட்டு மீதான தடையை மீறிய பொறுக்கிகளை, தமிழக அரசு அடித்து நொறுக்கி இருக்கிறது. இனிமேல் சசிகலாவும், ஒபிஎஸும் தமிழர்கள் இல்லையா ? ஹா ஹா.
**************
5

அநாதை எலிகள், தப்பியோடிய நக்சல்கள், கஞ்சா கூலிகளுக்கு தமிழக அரசிடம் இருந்து சரியான கவனிப்பு கிடைத்திருக்கிறது.
**************

ஆனால், இதற்க்கு தமிழர்களிடம் இருந்து சரியான பதிலடிகளையும் சுசாமி வாங்கி கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை. அதில் இருந்தும் சிலவற்றை உங்கள்  பார்வைக்கு வைக்கிறோம்.
8
**************
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
9
**************
10
**************
11
**************
12
**************

கருத்துகள் இல்லை: