சென்னை: ஊர் உலகமே உன்னை உற்றுப்பார்க்க வேண்டும் என்பார்கள். இன்று
ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் மொத்தமாக திருப்பி வருகிறது
தமிழ்நாட்டு இளைஞர் படை, பெண்கள் படை. தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றில்
இது மாபெரும் தருணமாக, பெருமை மிகு போராட்டமாக பதிவாகியுள்ளது.இது எங்க ஏரியா உள்ளே வராதே.. இதுதான் போராட்டக் களத்தில் இருக்கும் புரட்சி நாயகர்கள் அரசியல்வாதிகளுக்கும், பிறருக்கும் தரும் ஒரே பதிலாக இருக்கிறது. எங்க பிரச்சினையை இதுவரை தீர்க்காத நீங்க எங்களுக்கு வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பதே இதற்கு அர்த்தமாகும். இதுவரை தமிழ் கூறும் நல்லுலகம் காணாத வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாட்கள் இவை. தமிழர்களின் பொற்காலமாக இது மாறியிருப்பதுதான் வியப்பின் உச்சமாகும். ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் திரண்டு நிற்பதை நாடே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்காரர்கள் முட்டாள்கள், எதற்குமே ஒன்று சேர மாட்டார்கள், சினிமா அடிமைகள், வாய்ச் சொல் வீரர்கள், பழம் பெருமை பேசியே வீணாய்ப் போனவர்கள் என்று கூறி வந்த அத்தனை வாய்களும் இன்று அடைத்துப் போய்க் கிடக்கின்றன. ஏன் தமிழக அரசியல்வாதிகளையே ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி விட்டு பூரித்து ஆர்ப்பரித்து தனது கலாச்சாரத்தைக் காக்க ஆரவாரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.< கடற்கரையில் தமிழ் தலைகள்< இன்று போராட்டக் களத்தில் புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர் படை தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்து விட்டது.
வரலாறு இவர்களை என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கு வியாபித்து விஸ்வரூபம் காட்டி அதிரடித்துக் கொண்டிருக்கிறது இந்த இளைஞர் படை.
சிங்கத்தை தூக்கி மிதித்தி புலிப்படையடா நாங்கள்
ஒரு கலவரம் இல்லை.. பிரச்சினை இல்லை
பொறுப்பு என்றால் இதுதான்
பிரமிக்க வைத்த பெண்கள்
சங்க கால வீரப் பரம்பரை
வரலாறு காணாத வீராவேசம்
நாங்க இருக்கோம்
உலகத தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. மிகப் பெரிய நம்பிக்கையை இந்த இளைஞர் கூட்டம் ஒவ்வொரு தமிழ்நாட்டவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனி ஒவ்வொரு பிரச்சினையையும் நாங்க தீர்த்து வைக்கிறோம் கவலைப்படாதீர்கள்.. ஒரு கை பார்த்து விடலாம் என்று தமிழ் மக்களுக்கு இந்த இளம் படை தைரியம் கொடுப்பதாக இந்த எழுச்சி மிக்க புரட்சி அமைந்துள்ளது.பெருமையுடன் இந்த இளம் படைக்கு உறுதுணையாக இருப்போம்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக