வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு... மதிமாறன்

சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது?
அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது?
கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். மாட்டுக்கறி சாப்பிடறவனாலதான் இன்னும் நல்லா மாடு புடிக்க முடியும்.
பயம். நம்ம மாட்டை மாட்டுக்கறி சாப்பிடறவன் புடிச்சிறபோறான்னு.
ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியவர்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள். ஆனால், பல மூட பிரமுகர்கள் கம்பு சுத்துறது மாட்டுக்கறி சாப்பிடறவன்கிட்ட. இந்த அநியாயத்தை மாடே ஒத்துக்காது.
‘ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு. ஏகாதிபத்திய – பார்ப்பனிய கூட்டான Peta வுக்கும் குறிப்பாக மோடி க்கு எதிரான முழக்கங்களோடு தமிழ்நாடு தழுவிய பெரிய முதல் போராட்டம் இது; அதுவும் மாணவர் நடத்துவது.

மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல, கல்வி உட்பட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரகாலத்திற்கே எதிரானது என்கிற புரிதலாக இது மாறினால் மகிழ்ச்சி.
ஒரு வேளை மோடி ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்துவிட்டால் அது பாஜகவிற்கு ஆதரவாக மாறிவிடக்கூடாது என்கிற அச்சமும் இருக்கிறது.
ஆனாலும், மாணவர் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.
ஜல்லிக்கட்டை ஆதரிக்கிற சிலர், மாணவர் போராட்டத்தை எதிரக்கும் போது, ஜல்லிக்கட்டை எதிர்க்கிற நான் ஏன் மாணவர் போராட்டத்தை ஆதரிக்கக் கூடாது?

கருத்துகள் இல்லை: