வியாழன், 19 ஜனவரி, 2017

லாரிகள் இயங்காது.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக .. லாரி சம்மேளனம அறிவ்ப்பு


தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழக லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவை தெரிவித்து வரும் வெள்ளிக்கிழமை 20ம் தேதி ஒரு நாள் லாரிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார். இது பற்றி லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் குமாரசாமி கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே ஜல்லிக்கட்டு தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் லாரிகள் இயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்  லைவ்டே

கருத்துகள் இல்லை: