புதன், 2 ஜூன், 2010

பூநகரிக்கும், குருநகருக்குமிடையிலான படகுச்சேவை இன்று உத்தியோகபூர்வமாக


வடபகுதி மக்களின் போக்குவரத்து வசதிகருதி பூநகரிக்கும், குருநகருக்குமிடையிலான படகுச்சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என அரசதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாண ஆளுநர்மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்படப் பலர் கலந்துகொண்டு படகுச்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சுமார் 6கிலோமீற்றர் தூரத்திற்கு இப் படகுச்சேவை நடத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 4படகுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந் திரசிறி தெரிவித்துள்ளார். தரைவழியாக இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளும் பயணத்தை படகுச்சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும். அத்துடன், இதன்மூலம் மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஸ் கட்டணத்தைவிட குறைந்ததாக பயணமொன்றுக்கு 40ரூபா அறவிடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பூநகரி சங்குப்பிட்டி பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்னர் இப் படகுச்சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டார் என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: