செவ்வாய், 1 ஜூன், 2010

லொறியினுள் மறைந்திருந்தவாறு பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்த 16



பந்தய கார் ஒன்றை ஏற்றிச் சென்ற லொறியினுள் மறைந்திருந்தவாறு பிரித்தானியாவுக்குள் நுழைய   முயற்சித்த 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய் யப்பட்டுள்ளனர்.
மேற்படி சட்டவிரோத குடியேற்றவாசிகளில் 8 ஆப்கானிஸ்தானியர்கள்,    4 ஈராக்கியர்கள்   மற்றும் 4 வியட்நாம் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர்.
இது தொடர்பில் பிரித்தானிய எல்லைப்படைத் தலைவர் புரூடி கிளார்க் விபரிக்கை யில், “நாங்கள் பித்தானியாவுக்குள் வந்தடையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு பிந்தியதொழில் நுட்பங்களையும் மோப்ப நாய்களையும் பயன்படுத்துகிறோம். சட்டவிரோத குடியேற்றவாசிகளின்     பிரவேசத்தை தடுப்பது தொடர்பில்     எமது அதிகாரிகளின்    உன்னதசெயற்பாட்டுக்கு ஒரு உதாரணமாக     இந்த சட்டவிரோத குடி யேற்றவாசிகளின் கைது அமைகிறது » என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: