புதன், 2 ஜூன், 2010

சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்த அரசியல் கட்சியாக பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகாந்த தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் முக்கியஸ்தர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்கள் அடுத்தவாரம் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவரிடம் வினாவியதற்கு பதிலளிக்கையில் தாம் ஏனைய தமிழ்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: