சனி, 29 டிசம்பர், 2018

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு

தேசிய விருது பெற்ற தி.மு.க. பிரமுகர்
கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் பலிமாலைமலர் : கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள மங்களம்கொம்பு கிராமத்தில் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே, கொடைக்கானல் கீழ்மலை பகுதியில்  மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 50. தி.மு.க. பிரமுகரான இவர்  ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவர் ஆவார்.  இவரது வீட்டில் அதிகாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், அவரும் அவரது மனைவி மஞ்சுளா ( 45)  மகள் விஷ்ணுப்ரியா(10)  ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.


மகளின் படிப்புக்காக சின்னாளபட்டியில் குடியிருந்து வந்த நிலையில், அரையாண்டு விடுமுறைக்காக  மங்களம்கொம்பு வந்துள்ளனர். இரவு கேஸ் சிலிண்டரை சரியாக மூடிவைக்காததால் கியாஸ் கசிந்ததாகவும், அதை உணராமல் அதிகாலையில் தேநீர் போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தபோது வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்த கணேசன், கமனூர் ஊராட்சி தலைவராக இருந்தபோது, சிறந்த ஊராட்சிமன்ற தலைவருக்கான தேசிய விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: