சனி, 29 டிசம்பர், 2018

சிந்தனை மொழியில் இருந்து விலகி வேற்று மொழியில் கற்பது அறிவை வளர்க்காது

Kanimozhi MV : முழுதும் ஆங்கில வழி கல்வியில் மட்டுமே படித்தேன் ; அதன்
குறைகளை நன்கு அறிவேன்; ஆழ்ந்த அறிவு ஆங்கில வழி படிப்பவர்களை விட தமிழ் வழி படித்தவர்களிடம் இருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன்;
அரசு பள்ளிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செயல்படுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை;
முழுவதும் தமிழை எடுத்துவிட்டால் என்ன நன்மை என்று எனக்கு புரியவில்லை! தமிழ்வழி படித்தவர்கள் கிரின்கார்ட்டு வாங்கி இங்கு நல்ல பணியில் இருக்கின்றனர்; தமிழ் ஒரு மொழியாக வேண்டுமானால் இருக்கட்டும் என்று சொல்வது வேதனை;
உங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் தானே வேண்டும் ; அதற்கு அருமையான யோசனை
வீட்டிலும் ஆங்கிலம் பேச தொடங்கி விடுங்கள் , நிறைய மாற்றங்கள் வந்துவிடும் ;
எதற்கு தமிழை ஒரு மொழியாக வேண்டுமானால் வைத்துக்கொண்டு? அதை வீடுகளில் இருந்தும் ஒழித்துவிட்டால் சிந்தனை பேச்சு எழுத்து ஒரே மொழியில் அமையும் போது நன்மைகள் அதிகம் ;
உண்மையும் இது தான் !
தமிழை யாராவது வெளிநாட்டு அறிஞர் அருங்காட்சியிலாவது
காப்பாற்றிக் கொடுப்பார்கள்!
என் குழந்தைகள் வெளிநாட்டில் பிறக்கவில்லை என்றால் அரசு தமிழ் வழிக்கல்வியில் தான் சேர்த்திருப்பேன்;

ஒரு வேளை ஊருக்கு திரும்பி வரின் ஆங்கிலமே அவர்கள் சிந்தனை மொழி என்பதால் அரசு ஆங்கில வழி பள்ளியில் சேர்க்கவே விரும்புவேன் !
எது உங்களின் சிந்தனை மொழியோ அதில் இருந்து விலகி கல்வியை கற்க நினைப்பது அறிஞர்களை ஒருபோதும் உருவாக்காது !

கருத்துகள் இல்லை: