புதன், 17 ஜனவரி, 2018

எய்ம்ஸ் மாணவன் கொலை ... போலீஸ் சந்தேகம் ... தலையில் காயம் .. ஸ்டாலின் அறிக்கை


சென்னை: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். டில்லி யுசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்தால் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சரவணன் , சரத் பிரபு மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.தினமளர்

கருத்துகள் இல்லை: