செவ்வாய், 16 ஜனவரி, 2018

ஆளுநர் புரோகித் அதிரடி சோதனைகளில் ... அந்த 570 கோடி காண்டேயினரையும் கண்டு பிடியுங்க சார்

தினமலர் :தமிழக அரசு நிர்வாக ஊழல்கள் மற்றும் அரசியல் குழப்பங்கள் குறித்து, பிரதமர் மோடியிடம், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், விரிவாக பேசிய தகவல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஊழல் ஒழிப்பை பிரதானமாக வைத்து, பா.ஜ., அரசு இயங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக< இருக்கும் தமிழக அரசில், ஊழல் புகார்கள் அதிகமாக இருப்பதை, கவர்னர் அறிந்துள்ளார்.
மணல், 'குட்கா' என, பல விஷயங்கள், அவரது கவனத்திற்கு வந்தன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வின்போது, சில ஊழல்களை, கவர்னர் உறுதி செய்துள்ளார். ஆளுங்கட்சியில் நிலவும் குழப்பங்கள், ரஜினி - கமல் அரசியல் பிரவேசம், சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கைகள், அவர் கையில் உள்ளன.

அவர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவை அனைத்தையும் தந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடி, அரசு மற்றும் அரசியல் போக்கை தொடர்ந்து கவனிக்க, கவர்னருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், தமிழக அரசு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறதா என பார்க்க, சிறிது அவகாசம் தரலாம் என்றும், கவர்னரிடம் கூறியதாக தெரிகிறது. மாநில அரசின் போக்கை பொறுத்து, மத்திய அரசின் நடவடிக்கை அமையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: