வெள்ளி, 19 ஜனவரி, 2018

தங்கத்தமிழ் செல்வன் :போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்!

நக்கீரன் :போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி பேசாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய 2 நடிகர்கள் அவரின் மறைவிற்கு பின்னர் திடீரென பேசுகிறார்கள் என்றால் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி முதலமைச்சர் ஆகி விடலாம் என்று நினைகிறார்கள்.
அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும். கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிப்புகள், விவசாய பாதிப்புகள் குறித்தும் வாய் திறக்கவும் இல்லை. நேரடியாகச் சென்று சந்திக்கவும் இல்லை. இதே போல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 10 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள் இது குறித்தும் அறிக்கை எதுவும் வெளியிடவும் இல்லை. இவைகளை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது.
எப்போதும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். தேர்தல் வரும் போது அவர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: