செவ்வாய், 20 ஜூன், 2017

கல்வி கொள்ளை! மாணவிகள் ஏழ்மையால் விபசாரம் செய்கின்றனரா?

சமீப காலமாக சென்னை உள்ளிட்ட பகுதியில் நவீன விபச்சாரம் நடக்கிறது. இதில் இறங்கும் மாணவிகள், அது ஒரு குற்றமாக கருதுவது இல்லை. தங்களுக்க இலவசமாகச் சுகமும் கிடைக்கிறது. ஆடம்பரமாகவாழ பணமும் கிடைக்கிறது. என்பதால் இதில் இறங்குகின்றனராம்.
சில கல்லூரி மாணவிகள், ஏழ்மை நிலையில் பெற்றோருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக பணம் சம்பாதிக்க இந்தத் தவறான வழியைத் தேர்வு செய்கின்றனர். இது போன்ற பெண்களை தேர்தெடுப்பதற்காக விபச்சாரக்கும்பல் கையாளுவதுதான் கல்லூரி மாணவிகளிடம் நட்பு. அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் அவர்களிடம் பழகி, குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களை மயக்கியோ. அல்லது போதை பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் கலந்து கொடுத்தே இந்தச் செயல்களில் இறங்க வைக்கின்றனர்.
ஒருநாள் முழுவதும் சொல்வதைப் போன்று நடந்து கொண்டால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் கிடைக்கும். உங்களை அவர்கள் கொடைக்கானல், ஊட்டி, போன்ற சுற்றலா ஸ்தலங்களுக்க அழைத்தும் போவார்கள்.

இது யாருக்கும் தெரியாது படிக்கும்போதே நீங்கள் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி மாணவிகளைப் பலியாக்குகின்றனர். இது போன்ற சம்பவம் ஒன்றுதான் நேற்று பாண்டிச்சேரியில் நடந்தது.
புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த தீபக் மனைவி சுனதா தேவி. இவர் இந்தப் பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவிகள் இரண்டு பேரை, ஆசைவார்த்தைகள் கூறி அந்த சுகத்திற்கம், பணத்திற்கும் நேற்று சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த மாணவிகளும் சுனதா தேவியுடன் சென்றனர்.
அவர்கள் 3 பேரும் கும்முடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது பெரிய கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகத்தற்கு இடம் அளிக்கும் வகையில் அந்த 3 பேரின் பார்வை இருந்தது. திரு, திரு வென்று விழித்தனர் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
இதில் பயந்த மாணவிகள் அப்படியே அந்தப் பெண் சுனதா தேவி என்ன சொல்லி எதற்கு அழைத்து வந்தாரே அந்த உண்மை அனைத்தையும் கூறிவிட்டனர். நாங்கள் கல்லூரி மாணவிகள் எங்கள் வாழ்க்கையைக் கொடுக்காதீர்கள் என்று புலம்பினர்.
இதனையடுத்து தீவிர விசாரணையில் சுனதாதேவியின் பெற்றோரும் இந்தக் கல்லூரி மாணவிகளை விபச்சாரத் தொழிலில் தள்ளத் திட்டம் வகுத்துக் கொடுத்தது தெரிய வந்தது.
இந்தவழக்கைப் புதுச்சேரி போலீசாருக்கு மாற்றினர் அங்குக் கல்லூரி மாணவிகள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். சுனதாதேவி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுனதாதேவியின் பெற்றோர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏழை மாணவிகள் பணத்துக்காகவும், உடல் சுகத்துக்காகவும், உல்லாசமாக வாழவும் தடம் மாறிச் செல்கின்றனர். லைவ்டே

கருத்துகள் இல்லை: