ஞாயிறு, 18 ஜூன், 2017

ஊழலை ஒழிக்க வந்த மோடியே அருண் ஜெட்லியே ஓடிப்போன அந்த 9 காண்டேயினர்கள் 570 கோடி எங்கே?

Damodaran< திரு.மோடி அவர்களே ! அருண் ஜைட்லீ
அவர்களே !.....
பிடிபடாமல் தப்பி ஓடிவிட்ட 9 கண்டைனர்கள் எங்கே போனது ?
பிடிபட்ட 3 கண்டைனர்களில் சொல்லப்பட்ட 570 ரூபாய் யாருடையது ?
கரூர் அன்பு நாதன் வீட்டில் சிக்கிய பணம் ஆதாரங்கள் கதி என்ன ? சென்னையில் பலஇடங்களில் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் சிக்கிய ஆதாரங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?
ராம் மோகன் ராவுக்கு மீண்டும் பதவி வழங்கியது எப்படி ?
எல்லாம் போக.... முதல்வர் எடப்பாடி மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் அந்த 89 கோடி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து மூன்று மாதங்களாகியும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் ?
பன்னீர்செல்வம் அவரது கூட்டாளிகள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் மீது ஏன் விசாரணை இல்லை ? இதற்கெல்லாம் எப்போது பதில் சொல்வீர்கள் ?
மேற்சொன்ன முறைகேடுகளை மூடி மறைக்கவும் குற்றவாளிகளை காப்பாற்றும் செயலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும் மேற்படி ஊழல்களில் சம பங்குண்டு என்று மக்கள் நினைப்பதில் என்ன தவறு ?

ஊழலை ஒழிக்க பிறந்த உத்தமர்களே ?...
எழுதிகொண்டுவந்த வசனத்தை மன் கி பாத் வானொலியில் பேசி ஏமாற்றுவதைப்போல் அல்லாமல் ...மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு வீதிக்குவந்து பதில் சொல்லுங்கள்...

கருத்துகள் இல்லை: