திங்கள், 19 ஜூன், 2017

ரஞ்சித்தை மிரட்டிய ஷங்கர் .... பிளாக் டிக்கெட் விற்பனையை குறிவைத்து இரண்டுமே கோதாவில்

உச்ச நடிகரை வைத்து இரண்டெழுத்து படத்தை இயக்கி வருகிறார் அந்த சென்னை இயக்குநர். உச்ச நடிகர் ஏற்கனவே நடித்துள்ள படம் வெளியாக உள்ள நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பு தாதாக்களின் தலைநகரில் தொடங்கியது. அந்த படத்தை பற்றியே ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் அவ்வப்போது நடக்கும் பிரமோஷன்கள் தான். இதனால் தனது படம் படுத்து விடுமோ என அஞ்சுகிறாராம் அந்த நான்கெழுத்து இயக்குநர். இதனால் நேரடியாக சென்னை இயக்குநரை அழைத்து டோஸ் விட்டாராம். அவரது கோபத்தில் நியாயம் இருந்ததை உணர்ந்த இளம் இயக்குநர் அங்கிருந்து சைலன்டாக வந்து விட்டாராம்.லைவ்டே

கருத்துகள் இல்லை: