சனி, 24 ஜூன், 2017

மகளை எரித்துக் கொன்ற தந்தை! காதல் வெறுப்பு...

Family members lament after woman was burnt alive by her father. ... her in kerosene and burnt her to death in Uttar Pradesh's Moradabad
மின்னம்பலம் : உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே எரித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஷ்ரஃப் ரஸா கான். இவர் மகள் குல்ஃபஷா பீ (22). குல்ஃபஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜூன்,23) மதியம் 2 மணி அளவில் முஷ்ரஃப் ரஸா கான் தன் மகள் குல்ஃபஷா வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், குல்ஃபஷா அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது குல்ஃபஷாவின் தந்தையும் உறவினர்களும் குழந்தையை அவரிடமிருந்து பிரித்துவிட்டு, அவரைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பின்னர், மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர். வலியால் குல்ஃபஷா அலறி துடித்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குல்ஃபஷா இறந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதியம் 3 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஆதாரங்களை திரட்டினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் வத்சவா, ‘காதல் திருமணம் செய்ததற்காக குல்ஃபஷாவின் தந்தை உறவினர்களின் உதவியுடன் அவரைத் தீ வைத்து எரித்து ஆணவ கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன்(கொலை) கீழ் பெண்ணின் தந்தை உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குல்ஃபஷாவின் உறவினர் அஷ்ரஃப் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் தலித் வாலிபரைத் திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணிப் பெண்ணைக் குடும்பத்தாரே எரித்துக் கொன்ற சம்பவம் நினைவுகூரத்தக்கது

கருத்துகள் இல்லை: