திங்கள், 24 ஏப்ரல், 2017

வேலை நிறுத்தம் .. ராமதாஸ் எதிர்ப்பு !

சென்னை: 'முழு அடைப்பு போராட்டங்களை, உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றத்திடம் கோர முடியும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: ;விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக, ஏப்., 25ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. இது,அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர, விவசாயிகளை காப்பதற்கான முயற்சி அல்ல. ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும், போராட்டம் நடத்தும் போது, பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்; அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப் படுவர்.   அன்புமணியின்  ஊழல் வழக்கு நிலுவையில் டில்லியில் .... மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கவேண்டாம் வருமான வரிக்கணக்கு சரியாக பார்த்தல் போதும் அய்யா சின்னையா இருவரும் உள்ளே போகவேண்டிய நிலை வரும் ......

முழுஅடைப்பு போராட்டங்களை, உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட் டம் நடத்தினால், பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை < அமைக்கும்படி, உச்ச நீதிமன்றத்திடம்கோர முடியும்? விவசாயிகளின் பெய ரால் நடத்தப் படும், முழு அடைப்பு போராட்டத்தால் பாதிக் கப்படும் மக்கள், விவசாயி களைத்தான் துாற்று வர். எனவே, இந்த போராட் டத்தில், பா.ம.க., பங்கேற்காது. இவ்வாறு கூறியுள்ளார் தினமலர்

கருத்துகள் இல்லை: