சனி, 19 மார்ச், 2016

பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் மீண்டும் அதிமுக தலமைசெயலகம்..ஆக்டிவ் ...

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் இன்று வந்தனர்.
கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் அவர்கள் இடம் பெற்றனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நடந்து முடிந்த உள் வீட்டு  கூத்து  பகிரங்கமாவது அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய டாமேஜ் என்பது இப்போதுதான் வெளங்கி இருக்கிறது....மாபியா இயக்கங்களில் இதெல்லாம் சகஜமப்பா...இன்னும் நெறைய கூத்து தேர்தலுக்கு பிறகு விலாவாரியா வெளியே வரும்..    
இந்த குழு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், திராவிட மக்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. குறளரசு ஜெயபாரதி, நிலத்தரகர் சங்கம் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளுடன் பேசினார்கள்.
இன்று 34 அமைப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளன.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் கூறுகையில், ‘‘நாங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தேர்தல் குழுவிடம் ‘சீட்’ கேட்டு கடிதமும் கொடுத்திருக்கிறோம். அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுவோம்’’ என்றார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: