செவ்வாய், 15 மார்ச், 2016

தேர்தல் செலவுக்கு பயந்து கட்சி பொறுப்பாளர்கள் பலர் தலைமறைவு? எதுவுமே நிச்சயமில்லையே ?

சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 60 நாட்களுக்கு மேல் உள்ளதால், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் செலவுக்கு பயந்து, பம்மத் துவங்கி உள்ளனர். உள்ளூரில் இருந்தால், கட்சியினருக்கு செலவு செய்து, கடனாளியாக வேண்டியிருக்குமே என்ற பயத்தால், வெளியூர்களுக்கு ஓட்டம் எடுத்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' கிடைக்கும் என்பதை, யாராலும்உறுதியாகக் கூற முடியாது. ... புரிகிறதா? தமிழகமெங்கும் ஒரு கட்சியை நிறுத்த எவ்வளவு கஷ்டம் என்று? ஏற்கனவே இந்த கஷ்டத்தை விஜயகாந்த் அனுபவித்து இருப்பார். சொத்தை விற்று கட்சியை நடத்துகிறேன் என்று பலமுறை அவர் கூறியுள்ளார். பிறகு கடந்த ஐந்தாண்டுகளாக கூறுவதில்லை. காரணம், கட்சி ஆரம்பித்து, கூட்டணி வைக்க, பெரிய கட்சிகளிடம் பணம் வாங்கி அவரின் கடனை அடைத்துவிட்டார். விஜயகாந்த் தப்பித்து விட்டார். ஆனால் அவரை நம்பி, அவரின் பின்னால் வந்த மைகேல் ராயப்பன் போன்றோர் போண்டியாகி, பின்னர் அம்மாவிடம் சரண் அடைந்து, பணம் பெற்று, தப்பித்து கொண்டார்கள். இன்னும் பலர் விஜயகாந்திற்காக வீட்டை விற்று நடுத்தெருவிற்கு வந்தது தான் மிச்சம். அரசியல் வியாபாரம், அன்று சகுனி விளையாடிய விளையாட்டு போன்றது. ஜெயித்தால், கொள்ளை லாபம். தோற்றால் கடனாளி.
இதனால், மாவட்ட செயலர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரை, 'வேட்பாளராக அறிவிக்கட்டும்; அதன்பின், செலவை துவங்கலாம்.60 நாளைக்கு செலவிட்டால், சொத்தை விற்றுவிட்டு, கடனாளியாக வேண்டியது தான்' எனக் கூறி, உள்ளூரில் இருந்தாலும், சென்னையில் இருப்பதாகவும், கோவிலுக்கு
சென்றுள்ளதாகவும் கூறி, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டனர்.

தி.மு.க., -- காங்., மற்றும் தே.மு.தி.க.,வினர், தாங்கள் விரும்பியபடி கூட்டணி அமையாததால், 'சீட்' கேட்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துடனும், கிடைத்தாலும் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகத்துடனும் உள்ளனர். எனவே, கட்சியினர் யாராவது தேடி வந்தால், 'அப்புறம் பார்க்கலாம்' என ஆளை விட்டு சொல்லி அனுப்பி விடுகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினர், 234 தொகுதிகளிலும் நிற்க வேண்டியிருப்பதால், பொதுக் கூட்டம், பிரசாரத்திற்கே,கட்சியினரை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதற்கிடையில், வேட்பாளராக நிற்க வைத்தால் செய்ய வேண்டிய செலவுக்கு என்ன செய்வது என்ற கவலையில், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் உறைந்து போய் உள்ளனர். அதனால், இப்போதைக்கு வெளியில் தலை காட்டவே தயங்குகின்றனர்பா.ம.க.,வினரும், 234 தொகுதிகளில் போட்டியிடுவதால், கட்சி அறிவிக்கும் போது, அந்த தொகுதியில் பணியை துவங்கலாம் என்றிருக்கின்றனர். ஆனாலும், எப்படி செலவை சமாளிப்பது என்ற குழப்பத்தில் தான் உள்ளனர்இது தவிர, சிறிய மற்றும் ஜாதி கட்சிகள், கூட்டணி முடிவாகி,தொகுதி கிடைத்தால் பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
- நமது சிறப்பு நிருபர் --  தினமலர்.com

கருத்துகள் இல்லை: