ஞாயிறு, 13 மார்ச், 2016

விஜயகாந்த் நிபந்தனை! மக்கள் நல கூட்டணியின் பெயரை மாற்றவேண்டும்....2,....3,....4,....

மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் நிபந்தனை . தன் தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு, புதிய பெயர் சூட்ட உள்ளதாக, விஜயகாந்த் கூறியுள்ளதால், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிடும்' என்ற அறிவிப்பை, 10ம் தேதி, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். இதனால், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறும் என்ற, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. விஜயகாந்தின் இந்த நடவடிக்கையை, மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.அத்துடன், மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை தலைமை ஏற்க வைக்கவும், முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்கவும், கூட்டணியின் தலைவர்கள் தீர்மானித்தனர்.  மக்கள் நல கூட்டனி தலைவர்கள் எல்லாம் இப்போது தான் அரசியலுக்கு வந்தவர்கள்.அவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது பாருங்க? .போங்க போங்க  போய் அந்த போதை காந்திடமும் பிரேமாவிடமும் அரசியல் கற்று கொள்ளுங்கள்.


இந்தத் தகவலை, விஜயகாந்தை ரகசியமாக தொடர்பு கொண்டு தெரிவித்த அவர்கள், கூட்டணி பேச்சு நடத்த, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், 'அழைக்கும் போது வந்தால் போதும்' என, விஜயகாந்த் தரப்பில் அவர்களிடம்கூறப்பட்டு உள்ளது. இதை
தொடர்ந்து, இரண்டாவது நாளாகவும், விஜயகாந்தை அவர்கள் சந்திக்க முயற்சித்துள்ளனர். அதற்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதனால், தே.மு.தி.க., தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளை அழைத்து, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பேசியுள்ளனர். அப்போது, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை, விஜயகாந்த் சந்திக்காததன் காரணத்தை, தேர்தல் பணிக்குழுவினர் அம்பலப்படுத்தி உள்ளனர்.< நான்கு தலைவர்கள் அதிர்ச்சி:
இதுதொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மக்கள் நலக் கூட்டணி என்ற பெயர், விஜயகாந்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தன் தலைமையில் கூட்டணி அமையும் போது, அதற்கு புதுப்பெயரை சூட்ட வேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். தன் ஆஸ்தான கட்டைவிரல் ஜோதிடர் ஆலோசனைப்படி, கூட்டணிக்கான புதிய பெயரையும் அவர் தேர்வு செய்துள்ளார்.அந்தப் பெயரை ஏற்பதாக இசைவு தெரிவித்தால், விஜயகாந்தை சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறோம் என, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடம், தே.மு.தி.க., தேர்தல் பணிக்குழுவினர் கூறியுள்ளனர். விஜயகாந்தின் இந்த நிபந்தனையால், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக, ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தால், விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், கூட்டணி பேச்சு நடத்துவதில், காலதாமதம் ஏற்படலாம் என, நம்பப்படுகிறது. இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.  dinamalar.com

கருத்துகள் இல்லை: