வெள்ளி, 2 மே, 2014

பட புரமோஷனிலும் நயன்தாரா அலம்பல் ! கடுமையான வெயிலில் நடித்ததால் உடலில் நீர்சத்து குறைந்து எனக்கு மயக்கம் !

புரமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து
படம் தொடர்பாக பேட்டிகள் அளித்து வருகிறார் நயன்தாரா. அதிலும் அலம்பல் செய்வதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சேகர் கம்முலா இயக்கிய ‘நீ எங்கே என் அன்பே’ (தெலுங்கில் அனாமிகா) பட ஆடியோ விழாவை  ஹீரோயின் நயன்தாரா புறக்கணித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘விரைவில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்‘ என்று நயன்தாரா பேட்டி அளித்தார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி நடத்த போதிய அவகாசம் இல்லை என பட குழுவினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இணையதள மீடியாவை தொடர்பு கொண்டு நயன்தாரா பேட்டி அளித்து வருகிறார். ‘ஜன நெரிசலில் கேமராவை மறைத்து ஷூட்டிங் நடத்தினார்கள். கடுமையான வெயிலில் நடித்ததால் உடலில் நீர்சத்து குறைந்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஒவ்வொரு காட்சியும் 2 முறை படமாக்கப்பட்டது என்று படத்தில் நடித்த அனுபவத்தை குறைகளாக சொல்லி வருகிறார் நயன்தாரா. இதை அறிந்து டைரக்டர் சேகர் கம¢முலாவும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - See more tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: